02-02-2005, 03:25 AM
KULAKADDAN Wrote:[அப்ப இந்து வெளி நாகரித்துக்கும் தமிழருக்கும் தொடர்பில்ல....Quote:quote="Mathuran
வணக்கம்,
என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.
திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள்
அன்புடன்
மதுரன்
இதின் படி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி.....
வடக்லிருந்து தெற்கி ற்கில்லயோ........[/quote]
வணக்கம்,
சிந்துவெளி பகுதிகளிலும் திராவிடர்கள் வாழ்ந்தார்கள். பின்னாளில் வந்த ஆரியர்களின் ஊடுருவல்லால். அதாவது பஞ்சம் பிழைக்கவென வந்த அரியர்களை சிந்து நதிக்கரையோரம் வாழ்ந்த திராவிடர்கள் வரவேற்று அன்பாக உபசரித்தவர்களை. இன்னும் சொல்லப்போனால் நல்ல செல்வச் செளிப்போடு வாழ்ந்த திராவிடர்கள். பஞ்சம் பிழைக்க வந்த அடைக்கலம் கொடுத்த பின், ஆரியர்களாலேயே எம்மாற்றப்பட்டவர்களே சிந்திவெளியில் வாழ்ந்த திராவிடர்கள். இதன் பின்னர்தான் திராவிடர்களின் வீழ்சி படிபடியாக ஏற்பட்டதாக. அதுவே பின்நாளில் வட இந்தியாவில் இருந்து தென் இந்தியா நோக்கிய ஆரியர்களின் ஊடுருவலாக அமைந்தது எனவிம் ஒரு பத்திரிகையில் ஞாபகம் வருகின்றது.
இன்றய பாகிஸ்தானில் கூட திராவிடர்கள் வாழ்கின்றார்கள்.
இது எவ்வளவு தூரம் உண்மை என எனக்கு தெரியாது. இவற்றினை மேற்கொண்டு ஆராட்சிகள் மூலமே உறுதிப்படுத்த முடியும்.
அன்புடன்
மதுரன்

