02-01-2005, 03:18 PM
Mathuran Wrote:வணக்கம்,
என்களுக்கு ஏதாவது கறி வைக்கும் முறைகளை சொல்லி தாங்கோ. அப்பம் சுடுவதெல்லாம் எங்களுக்கு கஸ்ரமான வேலை.வேலயால வந்தா அப்பம் சுடவா நேரமிருக்கு. சோறுடன் ஒரு கறி அவ்வலவுதான். காலையில் பாண்.
அன்புடன்
மதுரன்
உருளைக்கிழங்கு மசாலா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்க 1/4 கிகி
சிறிதாக வெட்டிய ப.மிளகாய் 1 மே. கரண்டி
"" வெங்காயம் 1 மே கரண்டி
"" கறிவேப்பிலை 1 மே. கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தே. கரண்டி
தனி மிளகாய்த்தூள் 1 தே.கரண்டி நிரப்பி
பெருஞ்சீரகப் பொடி 1 சிட்டிகை
கறுவாப்பொடி 1 சிட்டிகை
கடுகு 1 சிட்டிகை
உழுத்தம்பருப்பு 1. தே.கரண்டி மட்டமாக
உப்புத்தூள் போதுமான அளவுக்கு
தே. எண்ணெய் 2 மே. கரண்டி
ஏலப்பொடி 1 சிட்டிகை
செய்முறை
உ.கிழங்கை அவித்துத் தோலுரித்து துண்டுகளாக வெட்டி மிளகாய்த்தூள் மஞ்சள்த்தூள் அளவிற்கு உப்புத்தூள் என்பவற்றையிட்டு சேர்த்து வைக்க.
பின்பு சட்டியில் தே. எண்ணெயை விட்டுக் காய்ந்த பின்பு கடுகைப்போட்டு பின்பு உழுத்தம்பருப்பு வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் என்பவற்றையும் போட்டு வதங்கவிட்ட பின்பு பெருஞ்சீரகப்பொடியையும் கறுவாப்பொடியையும் ஏலப்பொடியையும் சேர்த்து அதன் பின்பு உ. கிழங்கையும் சேர்த்த நன்கு கிளறி சிறிது நேரம் மூடி அவியவிட்டு வாசனை வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

