02-01-2005, 12:40 PM
anpagam Wrote:இந்தியப்படை உயர்மட்டத்தினரை ஜனாதிபதி சந்திரிகா சந்திப்பு
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிகளுக்கென இலங்கை வந்துள்ள இந்தியக் கடல் மற்றும் இராணுவத்தரப்பினரின் உயர்மட்டக்குழுவினரை சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்தித்துப்பேசியுள்ளார்.
இந்தியப் படையினர் இலங்கையில் ஆற்றிக்கொண்டிருக்கும் பணிக்கு தனது அரசின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி சந்திரிகாää இலங்கையை ஆழிப்பேரலை தாக்கியவுடன் முதலில் வந்து உதவிய படையினர் இந்தியத் தரப்பினரே என்று கூறி இந்தியப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் இந்தியப்படையினர் தாம் இலங்கையில் தற்போது மேற்கொண்டு வரும் பணி தொடர்பான தமது அனுபவங்களை ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எடுத்துக்கூறினர்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான இந்தியத்தூதுவர் நிருபாமா ராவும் உடனிருந்தார்.
--------------------
இந்திய-இலங்கை கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்த 742 கோடி ரூபா செலவில் புதிய திட்டம்
இந்தியா தனது கரையோரப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு 742 கோடி ருபா செலவிலான புதிய திட்டம் உள்றை அமுல்படுத்தவுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட கடல் ரோந்துப் பாதுகாப்பு மேலதிகமாகவும் அதேவேளை தற்போது அமுலில் உள்ள சில பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மேலதிகமாகவும் இந்தப்புதிய திட்டம் அமையும் எனக்கருதப்படுகிறது.
தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் கடத்தல் சம்பவங்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தப்புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கடல் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு கரையோரப் பொலிஸ் நிலையங்கள் அமைப்பு மற்றும் விசேட ரோந்து நடவடிக்கைகள் ஆகியவை உட்பட பல முக்கிய உபாயங்கள் அடங்கிய திட்டமாக இது இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு துறைசார் நடவடிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்
:roll: :roll:
மேலுள்ளதைப் பார்த்தால் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் ஓங்கி அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்துவிட்டது மாதிரி தெரிகிறது. அமெரிக்கப் படையினர் வெளியெறுவர் எனவும் செய்திகள் வருகிறது. உண்மையில் என்ன நடக்கிறது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

