02-01-2005, 06:56 AM
Thaya Jibbrahn Wrote:நிர்மல் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அவர்கள் போல வெறும் கோசங்களால் எதையும் சாதிக்கமுடியாது. அத்துடன் அவர்கள் கோசம் போடுவதும் தங்கள் தங்கள் சுயநலன்களுக்காகவே. அது சரி நிர்மலன் எனக்கொரு கேள்வி? சினிமாவிற்கு பெயர் சு10ட்டி வளர்;க்கும் நிலையிலா நம் தமிழ் மொழி இருக்கின்றது. ?? புரியவில்லை. உலகத்திற்கே நாகரீகம் கற்றுத்தந்த மொழி நம்முடையதல்லவா? அதற்கான சான்றுகள் இன்னமும் இருக்கின்றன. மற்றையது மொழி வளர்வதற்கு சில நெகிழ்வுத் தன்மைகளும் அவசியம். கால வளர்ச்சியுடன் புதிதுபுதிதாக மொழியும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழில் இப்போது அந்த முயற்சிகள் ஆரோக்கியமாகவே உள்ளன. தமிழ் என்றைக்கும் சாகாது.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அத்துடன் தமிழகததைப் பொறுத்த வரை அது ஒரு முதலாளித்துவ கோட்டை. அதற்குள் நடக்கும் சில காரியங்கள் எம்மை போன்றவர்களுக்கு நன்மை பெற்றுத்தருவதற்கானவை போல தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அவையெல்லாம் அவர்கள் முதலாளித்துவ போட்டியின் சில வடிவங்கள்.
தமிழ் தமிழ் எள கோசம் போட்ட ராமதாசிற்கு இவ்வாறான முதல்வர் அறிக்னை தேவையானது தான். திரைப்படங்கள் ஆபாசமானவை மொழியை கெடுப்பவை என்பது உண்மையாகவே இருந்தாலும் இவர் எப்படி ஒரு பேட்டை ரவுடி போல சவால் விட முடியும். தமிழை வைத்து வயிறு வளர்க்க நினைக்கும் இவர்களுக்கு இது போன்ற அங்குசப் பிடிகள் அவசியம் தான் .
நிர்மலன் ! நீங்கள் ஒனறுக்கம் யோசிக்க வேண்டாம். எங்கள் தேச விடுதலை எனும் பெரு விருட்சம் எங்கள் மொழிக்கும் சாகாவரம் கொடுக்கும் - இந்தியர்கள் போல கோசம் போடும் வேலைகளில் நீங்களும் இறங்கி விடாதீர்கள்.
வணக்கம்,
கன்னடத்தில் கன்னட அரசியல் வாதிகளும் ராஜ்குமார் ரசிகர் மன்றங்களும் பேட்டை ரவுடிகள் போல் செய்வது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையோ? கன்னடத்தில் தமிழ் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளிவந்த பின் சில வாரங்கள் களித்தே பிறமொழி திரைப்படங்கள் திரையிடப்பட முடியும் என சொன்னபோது. தொலுங்கு நடிகர்கள் அடுத்த நாட்களிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அனால் இன்று திருமாவும் தமிழ்குடிதாங்கி ஐயாவும் திரைபடத்தின் பெயரை மாற்ற சொன்னதும், தமிழ் திரைப்படதுறையினருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்ததுவோ? எங்கே இந்த கோபத்தை கன்னட திரையினர் மீது காட்டுவீர்களா? யாரையா பேட்டை ரௌடி? தமிழ்திரை திரையிட தடை கர்னாடகாவில் வந்தபொழுது, ரமேஸ் அரவிந்துடன் நட்பை பரிமாறிகொண்ட கமலகாசனா? இல்லை தமிழ்குடிதாங்கி ஐயா வா?
அன்புடன்
மதுரன்

