02-01-2005, 06:20 AM
Mathuran Wrote:வணக்கம்,
நண்பர்கள் போல கயவர்கள் ஐயன் வள்ழுவன் சொன்னதனை, திருமாவள்வன், சொன்னவைதான் இப்பொழுதும் ஞாபகத்துக்கு வருகின்றது. நீங்கள் யாவரும் நன்றாக கவனித்துப்பாருங்கள். இங்கு உங்களுக்கு இருக்ககூடிய அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு காலுக்குமேல் கால் போட்டுக் கொண்டு உங்கள் நாக்குகள் எவ்வாறெல்லாம் புறள்கின்றதோ அவ்வாறு பேசிக்க்கொல்ல முடியும். திரை என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் அவ்வள்வுதான், என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு இருந்துவிடுவீர்கள். அனால் அதன் தாக்கம் புரியாத குழந்தைகள் அல்லர் நீங்கள். வேண்டும் என்றே நித்திரை போல் நடிக்கின்ற உங்களிடம் நிச்சயமாய் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அந்த திரைப்படத்துறையிடம் இருந்து தமிழை மீட்டெடுக்க திருமாவிற்கும் தெரியும், தமிழ் குடிதாங்கிக்கும் தெரியும். நீங்கள் தயவு செய்து உதவி புரியாவிடினும் உபத்திரவம் புரியாமல் இருத்தல் நன்று. உங்களை என்னவென்று சொல்லுவது. தமிழ் எதிர்ப்பு ஊடகங்களில் வரும் கட்டுரைகளை படித்து இப்படியான சிறுபிள்ளை தனமான. இந்திய அரசியல் வாதிகள் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினரையும் சிறுமைப்படுத்தி சொல்லுகின்றீர்களே, தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினரை கேவலப்படுத்தும் அற்பத்தனமான காரியங்களை செய்யாதீர்கள். காலத்தின் தேவை அறிந்து செயல் படவேண்டும். என்ன செய்வது? தமிழன் திரிசாவின் இடுப்பை பார்பதில், தமிழ் அன்னையையே மறந்துவிடுகின்றான். அற்பத்தனங்களுக்காக எம் மாவீரர்கள் உயிர்கொடுத்து காத்த எம் ஈழ்த்தாயயும் காட்டிகொடுக்கிறான். ஜெயலலிதா சொல்வது இவனுக்கு வேதமோ? தமிழ்குடிதாங்கி சொல்வது இவனுக்கு சாபமோ? கமலகாசனுக்காய் உயிரை கொடுப்பானோ? இல்லை கன்னித்தமிழ் அன்னை தனை மீட்டு எடுப்பானோ?
அன்புடன்
மதுரன்

