01-31-2005, 03:20 PM
இன்று தமிழ்நாட்டில் முக்கியமாக பேசப்படுகிற விடயம் திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிடுவது.
தற்போது அது தொடர்பாக திரையுலகத்தினருக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சரும் திருவாய் மலர்ந்திருக்கிறார். மலர்ந்திருப்பதோடு மட்டுமல்லாது அதனை முன்னெடுக்கிற இராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகியோருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
இது திரையுலகத்தினருக்கு மிகவும் மகிழச்சியைக் கொடுத்திருக்கிறது. அதிலும் நடிகர் கமலஹாசன் முதல்வரை மிகவும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்த இடத்தில் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் சற்று விழிப்படைந்து தூய தமிழ்த் திரைப்படங்களை எடுத்தால் தான் புலம்பெயர் நாடுகளில் வெளியிடலாம் என்று ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியாதா?
நாம் தமிழ் சினிமாவை புறக்கணிக்க முடியாதவர்களாக இருக்கிறோம். கடைசி இப்படியான அழுத்தங்களையாவது நாம் பிரயோகித்து புலம்பெயர் தமிழர்களின் பலத்தை தமிழ் சினிமா உலகத்தினருக்கு காட்டலாம் இல்லையா?
தூய தமிழ்ப் பெயர் இட வேண்டும் என்று இராமதாஸ் மற்றும் திருமாளவன் குழுவினர் வேண்டுவது சரியாகவே தென்படுகிறது.
கன்னடர்களுக்கு, ஹிந்திக்காரர்களுக்கு ஏன் சிங்களவர்களுக்கு இருக்கின்ற ஒரு சதவீத மொழிப்பற்று ஏன் தமிழனுக்கு இல்லாமல் போகிறது?
இந்த பார்வையில் ஏன் தமிழ் சினிமா சிந்திக்க முனையவில்லை?
கன்னடர்கள் தமது மாநிலத்தில் தமிழ் திரைப்படங்களை குறிப்பிட்ட காலத்துக்கு பின்னரே ஓட முடியும் என்கிறார்கள். இதனை பார்த்தாவது இவர்களுக்கு மொழிப்பற்று வந்திருக்க வேண்டும் ஆனால் வரவில்லையே.
யாழ் கள நண்பர்களே இதில் நாம் எழுதுவதனால் எதுவும் நடந்துவிடாது என்று நினையாதீர்கள். நாம் சிறிது இதற்கு ஆதரவு கொடுத்தால் எதிர்காலத்தில் இதற்கு பெரும் ஆதரவு கிடைக்கும்.
<b>தமிழ் நீஷ பாஷை என்று கூறிய ஜெயேந்திரர் இன்று சிறையில்
தமிழில் படம் எடு என்று கூறியவனுக்கு நேரடி எச்சரிக்கை!
தமிழா நீ ஏன் இன்னும் விழிப்படையவில்லை?</b>
தற்போது அது தொடர்பாக திரையுலகத்தினருக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சரும் திருவாய் மலர்ந்திருக்கிறார். மலர்ந்திருப்பதோடு மட்டுமல்லாது அதனை முன்னெடுக்கிற இராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகியோருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
இது திரையுலகத்தினருக்கு மிகவும் மகிழச்சியைக் கொடுத்திருக்கிறது. அதிலும் நடிகர் கமலஹாசன் முதல்வரை மிகவும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்த இடத்தில் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் சற்று விழிப்படைந்து தூய தமிழ்த் திரைப்படங்களை எடுத்தால் தான் புலம்பெயர் நாடுகளில் வெளியிடலாம் என்று ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியாதா?
நாம் தமிழ் சினிமாவை புறக்கணிக்க முடியாதவர்களாக இருக்கிறோம். கடைசி இப்படியான அழுத்தங்களையாவது நாம் பிரயோகித்து புலம்பெயர் தமிழர்களின் பலத்தை தமிழ் சினிமா உலகத்தினருக்கு காட்டலாம் இல்லையா?
தூய தமிழ்ப் பெயர் இட வேண்டும் என்று இராமதாஸ் மற்றும் திருமாளவன் குழுவினர் வேண்டுவது சரியாகவே தென்படுகிறது.
கன்னடர்களுக்கு, ஹிந்திக்காரர்களுக்கு ஏன் சிங்களவர்களுக்கு இருக்கின்ற ஒரு சதவீத மொழிப்பற்று ஏன் தமிழனுக்கு இல்லாமல் போகிறது?
இந்த பார்வையில் ஏன் தமிழ் சினிமா சிந்திக்க முனையவில்லை?
கன்னடர்கள் தமது மாநிலத்தில் தமிழ் திரைப்படங்களை குறிப்பிட்ட காலத்துக்கு பின்னரே ஓட முடியும் என்கிறார்கள். இதனை பார்த்தாவது இவர்களுக்கு மொழிப்பற்று வந்திருக்க வேண்டும் ஆனால் வரவில்லையே.
யாழ் கள நண்பர்களே இதில் நாம் எழுதுவதனால் எதுவும் நடந்துவிடாது என்று நினையாதீர்கள். நாம் சிறிது இதற்கு ஆதரவு கொடுத்தால் எதிர்காலத்தில் இதற்கு பெரும் ஆதரவு கிடைக்கும்.
<b>தமிழ் நீஷ பாஷை என்று கூறிய ஜெயேந்திரர் இன்று சிறையில்
தமிழில் படம் எடு என்று கூறியவனுக்கு நேரடி எச்சரிக்கை!
தமிழா நீ ஏன் இன்னும் விழிப்படையவில்லை?</b>
S.Nirmalan

