01-31-2005, 08:19 AM
ஐயொ அரசியல் பேசிறதுக்கு தமிழை நல்ல வளைக்க விஜயகாந் கற்றுக் கொண்டு விட்டார். ஒவ்வொரு மேடைகளிலும் வீழ்வது நாமாகிலும் வாழ்வது தமிழ் என்றவர் இப்போ என் வாழ்விற்காய் தமிழ்ப் படத்திற்க்கு ஆங்கிலப் பெயர் வைக்கலாம் அது மட்டுமல்ல அது தவறு என்று எனக்கு தெரியும் அனால் நான் செய்ய மாட்டேன் ஏனென்றால் அது எனது வருங்கால அரசியல் எதிரிகளின் கோரிக்கை எனவே தான் இப்படி தொப்பியைப் பிரட்டி விட்டேன் என்று சொல்லாமல் ஏதொ தமிழுணர்வின் உச்சியில் தான் இருப்பதாய் கனாக் கண்டு கொண்டு உருக் கொரு இளைஞர் அணியை தனது மன்றம் என்ற பெயரில் அரசியல் எதிரிகளுக்கு அரசியலுக்கு வரமுன்னமே பிரச்சினையைக் கொடுக்கும் விஜயகாந் தமிழைப் பற்றி பேசுகின்றார். இவரை நடிகர் சங்க தலைவர் என்று சொன்னவுடன் அவர் தவறாய் தமிழகத்தின் தலைவன் என்று எண்ணி விட்டார் பொல..திரைப்படத்திற்க்கு தமிழ் பௌர் வைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் திருமாவளவனும் ராமதாசும் அரசியலக்காய் மக்களை விற்றவர்கள் அல்ல. அவர்கள் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகள் ஏசிக்காரில் ஏறி போலி முகத்தோடு வாழும் சினிமாக் காhரர்கள் அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியோ அல்லது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பொ திடீரென் அரசியலில் குதித்தவர்களே அல்லது அரசியலுக்கு வரமுன்னரெ அதைப் பற்றி பெசியவர்களn அல்ல.. அவர்கள் தமது உழைப்பினால் முன்னுனேறியவர்கள். அவர்களை மக்கள் நேசிக்கின்றனர். அதனை ஒடுக்கவெ விஜயகாந் முனைகிறார். கடந்த வருடம் மெடையில் பெசிய போதும் ராமதாசுக்கு எதிராக மக்களை தூண்ட விஜயகாந் எடுத்த முயற்சி அவரக்கே தீங்கானது.. இதை அவர் உணரவேண்டும் சினிமாவிலும் மேடையிலும் தமிழ் பெசுவதை விட்டு விட்டு நல்ல ஆக்க பூர்வமான முயற்ச்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும். மன்றத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதை விட்டு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் பாடசாலையை எவருமே தமிழ் சொல்வதில்லை காரணம் அவர்களுக்கு அதற்க்குரிய தமிழ் தெரியாது ஸ்க்கூல் என்பதே அங்கு தமிழாகியுள்ளது. அதே போல இன்னும் ஏராளமான வார்த்தைகள் ஆங்கிலத்திற்க்கும் அதே நேரம் கிந்திக்கும் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்க்குள் கட்டாய கிந்திக் கல்வியும். இதற்க்கு அடிப்படை காரணம் என்ன?? பெரும்பாலன அரசியல் வாதிகள் எதுவுமே பேசுவதில்லை. அதையும் மீறிப்பேசுபவர்கள் இப்படியான சந்தர்ப்பவாதிகளால் எதிர்க்கப்படுகின்றனர். ஏன் தமிழகத்தின் மிகப் பெரும் மூதறிஞர் என்று போற்றப்படம் கலைஞரின் உறவினரான் கலாநிதி மாறனில் தொலைக்காட்சியின் பெயர் என்ன?? சண் ரீ.வி. அதை சு10ரியன் தொலைக் காட்சி என்று வைத்தால் என்ன? இப்படி பலபல உதாரணங்களைச் சொல்லாலம். அவர்கள் கதைப்பதை நாம் கணக்கெடுக்கத்தேவையில்லை. ஆனால் நிச்சயம் தமிழக மக்கள் இதை ஆரயவேண்டும் இப்படியான சந்தர்ப்பவாதிகள் அரசியலில் இறங்கும் கனவை அடீயோடு இல்லாமல் செய்ய வேண்டும்..
நன்றி
நேசமுடன் நிதர்சன்
நன்றி
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

