01-29-2005, 12:29 AM
பெண்கள் முன்வர வேண்டும் .
காதல் புனிதமானது காதல் தெய்வீகமானது. காதலுக்குக் கண்ணில்லை. காதல் இன்றேல் சாதல் என்று ஏகப்பட்ட காதல் வார்த்தைகள் மண்ணில் நிலைத்துள்ளன. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்பவர்கள், மனப்பிறழ்வு அடைபவர்கள் எக்காலத்திலும் உள்ளனர். காதலி ஒருத்தி கிடைக்கவும், காதலன் ஒருவன் கிடைக்கவும், ஆண்களும் பெண்களும் ஏங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். காதலை மையமாக வைத்தே ஏராளமான இலக்கியங்களும் வந்துள்ளன. வள்ளுவர் கூட இதற்கெனத் தனி இயலைத்தந்துள்ளார். அகநாநூறு-நாற்றினை போன்ற சங்க இலங்கியங்களும் கூட உண்டு. இன்னும் தமி;ழர்கள் சால்பாகப் பேச்படுவதில் வீரமும் காதலுமே முதன்மை பெறுகின்றன.
தற்கால தமிழர்களின் வீரத்துக்கு உரைகற்கள் தேவையில்லை. இது உலகப்புகழ் பெற்ற விட்டது. ஆனால், தற்காலத் தமிழர்களின் காதலுக்கு எதை உதாரணமாக வைப்பது என்பது தெரியவில்லை.
காதல் ஒரு பொழுதுபோக்கா? காதல் ஒரு விளையாட்டா? காதல் ஒரு பள்ளிக்கூடமா? காதல் ஒரு நாடக ஒத்திகையா? காதல் காம இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் களமா? எது? எது? தமிழர்களின் மானம் என்பதும் குடிப்பிறப்பு என்பதால் வருவதல்ல. பண்பும், நற்குடிப் பிறப்பும், படிப்பும் நிறைந்தவர்தான் நல்ல மணமகள் அல்லது மணமகன் என்ற நிலை போய் இன்றும் பணமும், தொழிலும் திருமணம் செய்யும் காலமும் இது. காதலிக்கத் தொடங்குமுன் ஒரு பெண்ணோ ஆணோ எதிர்பார்ப்பாலரின் சாதி, சமயம். சொத்துக்கள், சாதகம் எல்லாவற்றையும் பார்த்து விட்டா தொடங்குவார்கள் இல்லை. ஆனால், காதல் முற்றிய பின் ஆண்கள் இவற்றைப்பார்க்கவே செய்கின்றார்கள். இதன் விளைவாகப் பெண்கள் ஏமாற்றத்துக்கு ஆளாக வேண்டி வருகின்றது.
அண்மையில் ஒரு பெண் தன்னைக் காதலித்தவர் திருமணம் செய்ய முன்வரவில்லை என்றார். காரணம் பெண்ணல்ல பெண்ணின் உறவினர்கள் யாரோ சாதிமாறித் திருமணம் செய்துள்ளார்கள். நாங்கள் இவ்வளவு பிரச்சினைக்கும் சாதி சுத்தமாகத்தான் இருக்கிறம்! என்றார் அவர். சரியான காரணமா?
இன்னுமொரு பெண் இரண்டொரு கடிதங்களே பரிமாறினாலும் இரண்டு மூன்று வருடங்களாக விரும்பியிருந்தவர். சுமார் ஆறு மாதங்களாகத் தொழிலில் மாற்றலாகிச் சென்றிருந்தார். இடையில் ஒரு தடவை வந்து அவளைப் பார்த்து விட்டும் போனவர். திருமணப் பேச்சை எடுத்தபோது அம்மா,அப்பா, அண்ணா,அக்கா எல்லோருக்கும் துரோகம் செய்வது போல உணர்கிறேன். நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செய்யுங்கள் என்று சற்றும் சலனமில்லாமல் கூறினார். ஒரு பெண்ணுக்கு அவன் செய்தது துரோகமில்லையா? இதுவே அவனுடைய சகோதரிக்கு நடந்தால் விடுவானா? ம்.... காதல் இவ்வளவுதான்.
இன்னுமொன்று மிக நெருக்கமான காதல் இரு பகுதியிலும் பெற்றோருக்கும் தெரிந்திருந்தது. வருவான் பேசுவான் விழாக்களில் கலந்து கொள்வான். மகிழ்ச்சியாகப் போனது காதல், திடீரென அவன் வாழ்க்கை நிலை உயர்ந்தது. இப்போது அந்தப்பெண்ணை பார்க்கவோ பேசவோ அவனுக்கும் நேரமில்லை. அவனுடைய பெற்றோருக்கும் நேரமில்லை. அந்தப்பெண்ணின் எதிர்காலமென்ன?
பெண்களின் உரிமைகளுக்கும் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பெண்களின் அபிவிருத்திக்கும் உழைக்கும் சர்வ தேசமோ, அரசாங்கங்களோ மிகச் சாதாரணமாகச் சட்டம் போட்ட இவற்றுக்குத் தீர்வு கண்டுவிட்டதாகப் பறைசாற்றினாலும் பெண்களின் மனம் என்ன சொல்கிறது. மனம் என்பதுதான் வாழ்க்கை. பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்குப் போடப்பட்ட சட்டங்கள் எந்தளவில் பெண்களைப் பாதகாக்கின்றன.
ஆணாதிக்க கருது கோள்களின் மீது ஆக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வெளிவரும் சட்டங்கள் இவை. திட்டமிட்டு 'உப்புக்குச் சப்பாணியாக" இதில் இரண்டொரு பெண்கள் கலந்து கொள்வதாகக் காட்டப்பட்டாலும் அவர்கள் வாய்திறக்கப்போவதில்லை. அவர்களுக்கு தங்கள் கதரைகளைக் காப்பாற்றி வைத்திருக்கவேண்டியதே முக்கியமாகும். திருமணப்புகைப்படங்கள் போல, ஒரு பெண்களுக்கான பத்திரிகையை நடத்தும் பெண், பத்திரிகையென தன்னால் எழுதப்படும் ஆசிரியர் தலையங்கத்தைக் கணவனிடம் காட்டி அனுமதி பெறவேண்டியுள்ளது. நான் உலக மட்டத்தில் பேசுகிறேன். சாதியழிப்பு ஒரு குற்றம் தமிழீழ ஒறுப்புச்சட்டம் இயல் 24,432, 433,437 இது பற்றி விரிவாகக் கூறுகிறது. இலங்கை குற்ற நடவடிக்கைச்சட்டத்திலும் அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயம் 12,13ஆம் சரத்துக்களில் இது வேறுவகையில் சுட்டப்பட்டுள்ளது. ஆனால், இது சார்பாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு எந்த ஒரு பரிகாரத்தையும் பெற முடியாதவாறு சட்டத்தை வழிநடத்துவோர் செயற்படுவதையும் காணலாம்.
காதலனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் (சட்டப்படி இயல் 21,414 ஆவது சரத்து இது பற்றிக் கூறுகின்றது) பாதிக்கப்பட்ட ஒரு பெண் மிக இரகசியமாகச் சென்று தனது முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம்.
ஆனால் ஒரு வாரத்துக்குள் அது 'ஓல்சிலோன் அவுட்" டான செய்தியாகும். சம்பந்தப்பட்ட இடங்களில் அப்படி ரகசியம் பேணப்படும். சரி போட்ட முறைப்பாட்டையாவது ஒழுங்குற?? விசாரிக்க ஆரம்பிக்கும் முன்பே போதியகால அவகாசம் காரணமாக எதிரி கட்டுப்பாட்டை மீறித் தன்னைக் காத்துக்கொள்கிறார். பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வுக் கூடம் மேலும் பொலிவு பெறுகின்றது.
காதலுக்கு ஒருபோதும் சட்டவலு இல்லை. ஒரு பெண் பலதடவை வேண்டாம். ஒரு தடவை நீதிமன்றம் போனாலம் அவள் திருமணத்தை எதிர்பார்க்க முடியாது. இக்கால இளைஞர்களுக்கு காதல் ஒரு விளையாட்டு. இது எலி பூனை விளையாட்டு. பூனையாக ஒரு இளைஞன் ஆகும் ஆட்டம் எலியாக பெண்ணுக்கு ஜீவ மரணப்போராட்டம். அக்காவும் தங்கையும் திருமண வயதில் இருக்கத் தம்பிக்குத் காதல் வரும் இது பற்றித்தெரியாத ஒரு பெண்ணை தற்கால சினிமாக் கதாநாயகர்கள் போல துரத்தித்துரத்திக் காதலில் விழச்செய்வர். திருமணம் பற்றிப் பேச்சு வரும்போதுதான் அவருக்குச் சகோதரிகள் பாசம் பொத்துக்கொண்டு வரும். காரணம் காதலியிடம் ஏதாவது கறக்கலாமா? என்னும் முயற்சி அது
இந்தவகைக் கேடுகெட்டவர்கள்தான் எங்கள் சமுதாயத்தில் நிரம்பிவழிகிறார்கள். வீரத்தின் விளைநிலமான இந்த மண்ணில் காதலில் கோழைகளையே சந்திக்கிறோம். ஏமாற்றப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் கிளர்ந்தெழ வேண்டும். ஏமாற்றும் துரோகிகளின் பெயர்கள் பகிரங்கமான இடங்களில் எழுதி ஒட்டப்பட வேண்டும். இவர்கள் கைது செய்யப்பட்டு வீதி உலா விடப்படவேண்டும்.
ஒரு நாட்டின் மானம் அந்நாட்டின் பெண்களிலம், பசுக்களிலுமே தங்கியிருந்தது. இருக்கிறது. ஒரு வீட்டில் ஒரு பெண் தவறு செய்தால் அவ்வீட்டுத் தலைவனுக்குப் பெரும் அவமானமாகப் கருதப்படும்.
'புகழ் பூத்த இல்லார்க்கு இல்லை ஏறு போல் பீடுநடை"
என்று வள்ளுவரே சொல்லயிருக்கிறார். பெண்கள் இந்நாட்டின் வீர வரலாற்றின் பங்காளிகள் சமுதாயத்தில் அவர்கள் சோக வரலாற்றின் சொந்தக்காரராய் இருக்க அனுமதிக்ககூடாது. ஒவ்வொரு பெண்ணும் உன் தங்கையாய், தாரமாய், தாயாய் இருப்பவளின் பதிவுதான் பெண்களின் கண்ணீருக்குள் பேரழிவு காத்திருந்த வரலாறுகள் உண்டு. பெண்கள் கண்ணீர் விட்டால் நாடே அழிந்துவிடும் என்று கீதை கூறும் பாரதக்கதையில் விதுரன் கூறுகிறான். இந்தக்காதல் கோழைகளின் தோலுரித்துத் தொங்கவிடப் பெண்கள் அணி திரளவேண்டும். தொடர்ந்து நம் எதிர்காலப் பெண்களைக் காக்க நாம் முன் வரவேண்டும்.
மாயா
(sooriyan.com)
காதல் புனிதமானது காதல் தெய்வீகமானது. காதலுக்குக் கண்ணில்லை. காதல் இன்றேல் சாதல் என்று ஏகப்பட்ட காதல் வார்த்தைகள் மண்ணில் நிலைத்துள்ளன. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்பவர்கள், மனப்பிறழ்வு அடைபவர்கள் எக்காலத்திலும் உள்ளனர். காதலி ஒருத்தி கிடைக்கவும், காதலன் ஒருவன் கிடைக்கவும், ஆண்களும் பெண்களும் ஏங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். காதலை மையமாக வைத்தே ஏராளமான இலக்கியங்களும் வந்துள்ளன. வள்ளுவர் கூட இதற்கெனத் தனி இயலைத்தந்துள்ளார். அகநாநூறு-நாற்றினை போன்ற சங்க இலங்கியங்களும் கூட உண்டு. இன்னும் தமி;ழர்கள் சால்பாகப் பேச்படுவதில் வீரமும் காதலுமே முதன்மை பெறுகின்றன.
தற்கால தமிழர்களின் வீரத்துக்கு உரைகற்கள் தேவையில்லை. இது உலகப்புகழ் பெற்ற விட்டது. ஆனால், தற்காலத் தமிழர்களின் காதலுக்கு எதை உதாரணமாக வைப்பது என்பது தெரியவில்லை.
காதல் ஒரு பொழுதுபோக்கா? காதல் ஒரு விளையாட்டா? காதல் ஒரு பள்ளிக்கூடமா? காதல் ஒரு நாடக ஒத்திகையா? காதல் காம இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் களமா? எது? எது? தமிழர்களின் மானம் என்பதும் குடிப்பிறப்பு என்பதால் வருவதல்ல. பண்பும், நற்குடிப் பிறப்பும், படிப்பும் நிறைந்தவர்தான் நல்ல மணமகள் அல்லது மணமகன் என்ற நிலை போய் இன்றும் பணமும், தொழிலும் திருமணம் செய்யும் காலமும் இது. காதலிக்கத் தொடங்குமுன் ஒரு பெண்ணோ ஆணோ எதிர்பார்ப்பாலரின் சாதி, சமயம். சொத்துக்கள், சாதகம் எல்லாவற்றையும் பார்த்து விட்டா தொடங்குவார்கள் இல்லை. ஆனால், காதல் முற்றிய பின் ஆண்கள் இவற்றைப்பார்க்கவே செய்கின்றார்கள். இதன் விளைவாகப் பெண்கள் ஏமாற்றத்துக்கு ஆளாக வேண்டி வருகின்றது.
அண்மையில் ஒரு பெண் தன்னைக் காதலித்தவர் திருமணம் செய்ய முன்வரவில்லை என்றார். காரணம் பெண்ணல்ல பெண்ணின் உறவினர்கள் யாரோ சாதிமாறித் திருமணம் செய்துள்ளார்கள். நாங்கள் இவ்வளவு பிரச்சினைக்கும் சாதி சுத்தமாகத்தான் இருக்கிறம்! என்றார் அவர். சரியான காரணமா?
இன்னுமொரு பெண் இரண்டொரு கடிதங்களே பரிமாறினாலும் இரண்டு மூன்று வருடங்களாக விரும்பியிருந்தவர். சுமார் ஆறு மாதங்களாகத் தொழிலில் மாற்றலாகிச் சென்றிருந்தார். இடையில் ஒரு தடவை வந்து அவளைப் பார்த்து விட்டும் போனவர். திருமணப் பேச்சை எடுத்தபோது அம்மா,அப்பா, அண்ணா,அக்கா எல்லோருக்கும் துரோகம் செய்வது போல உணர்கிறேன். நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செய்யுங்கள் என்று சற்றும் சலனமில்லாமல் கூறினார். ஒரு பெண்ணுக்கு அவன் செய்தது துரோகமில்லையா? இதுவே அவனுடைய சகோதரிக்கு நடந்தால் விடுவானா? ம்.... காதல் இவ்வளவுதான்.
இன்னுமொன்று மிக நெருக்கமான காதல் இரு பகுதியிலும் பெற்றோருக்கும் தெரிந்திருந்தது. வருவான் பேசுவான் விழாக்களில் கலந்து கொள்வான். மகிழ்ச்சியாகப் போனது காதல், திடீரென அவன் வாழ்க்கை நிலை உயர்ந்தது. இப்போது அந்தப்பெண்ணை பார்க்கவோ பேசவோ அவனுக்கும் நேரமில்லை. அவனுடைய பெற்றோருக்கும் நேரமில்லை. அந்தப்பெண்ணின் எதிர்காலமென்ன?
பெண்களின் உரிமைகளுக்கும் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பெண்களின் அபிவிருத்திக்கும் உழைக்கும் சர்வ தேசமோ, அரசாங்கங்களோ மிகச் சாதாரணமாகச் சட்டம் போட்ட இவற்றுக்குத் தீர்வு கண்டுவிட்டதாகப் பறைசாற்றினாலும் பெண்களின் மனம் என்ன சொல்கிறது. மனம் என்பதுதான் வாழ்க்கை. பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்குப் போடப்பட்ட சட்டங்கள் எந்தளவில் பெண்களைப் பாதகாக்கின்றன.
ஆணாதிக்க கருது கோள்களின் மீது ஆக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வெளிவரும் சட்டங்கள் இவை. திட்டமிட்டு 'உப்புக்குச் சப்பாணியாக" இதில் இரண்டொரு பெண்கள் கலந்து கொள்வதாகக் காட்டப்பட்டாலும் அவர்கள் வாய்திறக்கப்போவதில்லை. அவர்களுக்கு தங்கள் கதரைகளைக் காப்பாற்றி வைத்திருக்கவேண்டியதே முக்கியமாகும். திருமணப்புகைப்படங்கள் போல, ஒரு பெண்களுக்கான பத்திரிகையை நடத்தும் பெண், பத்திரிகையென தன்னால் எழுதப்படும் ஆசிரியர் தலையங்கத்தைக் கணவனிடம் காட்டி அனுமதி பெறவேண்டியுள்ளது. நான் உலக மட்டத்தில் பேசுகிறேன். சாதியழிப்பு ஒரு குற்றம் தமிழீழ ஒறுப்புச்சட்டம் இயல் 24,432, 433,437 இது பற்றி விரிவாகக் கூறுகிறது. இலங்கை குற்ற நடவடிக்கைச்சட்டத்திலும் அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயம் 12,13ஆம் சரத்துக்களில் இது வேறுவகையில் சுட்டப்பட்டுள்ளது. ஆனால், இது சார்பாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு எந்த ஒரு பரிகாரத்தையும் பெற முடியாதவாறு சட்டத்தை வழிநடத்துவோர் செயற்படுவதையும் காணலாம்.
காதலனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் (சட்டப்படி இயல் 21,414 ஆவது சரத்து இது பற்றிக் கூறுகின்றது) பாதிக்கப்பட்ட ஒரு பெண் மிக இரகசியமாகச் சென்று தனது முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம்.
ஆனால் ஒரு வாரத்துக்குள் அது 'ஓல்சிலோன் அவுட்" டான செய்தியாகும். சம்பந்தப்பட்ட இடங்களில் அப்படி ரகசியம் பேணப்படும். சரி போட்ட முறைப்பாட்டையாவது ஒழுங்குற?? விசாரிக்க ஆரம்பிக்கும் முன்பே போதியகால அவகாசம் காரணமாக எதிரி கட்டுப்பாட்டை மீறித் தன்னைக் காத்துக்கொள்கிறார். பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வுக் கூடம் மேலும் பொலிவு பெறுகின்றது.
காதலுக்கு ஒருபோதும் சட்டவலு இல்லை. ஒரு பெண் பலதடவை வேண்டாம். ஒரு தடவை நீதிமன்றம் போனாலம் அவள் திருமணத்தை எதிர்பார்க்க முடியாது. இக்கால இளைஞர்களுக்கு காதல் ஒரு விளையாட்டு. இது எலி பூனை விளையாட்டு. பூனையாக ஒரு இளைஞன் ஆகும் ஆட்டம் எலியாக பெண்ணுக்கு ஜீவ மரணப்போராட்டம். அக்காவும் தங்கையும் திருமண வயதில் இருக்கத் தம்பிக்குத் காதல் வரும் இது பற்றித்தெரியாத ஒரு பெண்ணை தற்கால சினிமாக் கதாநாயகர்கள் போல துரத்தித்துரத்திக் காதலில் விழச்செய்வர். திருமணம் பற்றிப் பேச்சு வரும்போதுதான் அவருக்குச் சகோதரிகள் பாசம் பொத்துக்கொண்டு வரும். காரணம் காதலியிடம் ஏதாவது கறக்கலாமா? என்னும் முயற்சி அது
இந்தவகைக் கேடுகெட்டவர்கள்தான் எங்கள் சமுதாயத்தில் நிரம்பிவழிகிறார்கள். வீரத்தின் விளைநிலமான இந்த மண்ணில் காதலில் கோழைகளையே சந்திக்கிறோம். ஏமாற்றப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் கிளர்ந்தெழ வேண்டும். ஏமாற்றும் துரோகிகளின் பெயர்கள் பகிரங்கமான இடங்களில் எழுதி ஒட்டப்பட வேண்டும். இவர்கள் கைது செய்யப்பட்டு வீதி உலா விடப்படவேண்டும்.
ஒரு நாட்டின் மானம் அந்நாட்டின் பெண்களிலம், பசுக்களிலுமே தங்கியிருந்தது. இருக்கிறது. ஒரு வீட்டில் ஒரு பெண் தவறு செய்தால் அவ்வீட்டுத் தலைவனுக்குப் பெரும் அவமானமாகப் கருதப்படும்.
'புகழ் பூத்த இல்லார்க்கு இல்லை ஏறு போல் பீடுநடை"
என்று வள்ளுவரே சொல்லயிருக்கிறார். பெண்கள் இந்நாட்டின் வீர வரலாற்றின் பங்காளிகள் சமுதாயத்தில் அவர்கள் சோக வரலாற்றின் சொந்தக்காரராய் இருக்க அனுமதிக்ககூடாது. ஒவ்வொரு பெண்ணும் உன் தங்கையாய், தாரமாய், தாயாய் இருப்பவளின் பதிவுதான் பெண்களின் கண்ணீருக்குள் பேரழிவு காத்திருந்த வரலாறுகள் உண்டு. பெண்கள் கண்ணீர் விட்டால் நாடே அழிந்துவிடும் என்று கீதை கூறும் பாரதக்கதையில் விதுரன் கூறுகிறான். இந்தக்காதல் கோழைகளின் தோலுரித்துத் தொங்கவிடப் பெண்கள் அணி திரளவேண்டும். தொடர்ந்து நம் எதிர்காலப் பெண்களைக் காக்க நாம் முன் வரவேண்டும்.
மாயா
(sooriyan.com)
:::: . ( - )::::

