01-28-2005, 08:26 AM
காதல் கவிதைகள்
*அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன. உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.
*உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில்.
*ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
காட்டியதெனக்கு.
*சோம்பல் முறிக்கையில் எவ்வளவு
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
*அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன ... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே உன்
நிழல்.
*நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே.
*எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும்
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
*நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ து¡ங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்.
*என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை.
*சூரியனை ஒரு முறைகூட முழுசாகப்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது.
*'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானே உன்
கண்கள்.
நன்றி தமிழ்
*அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன. உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.
*உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில்.
*ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
காட்டியதெனக்கு.
*சோம்பல் முறிக்கையில் எவ்வளவு
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
*அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன ... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே உன்
நிழல்.
*நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே.
*எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும்
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
*நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ து¡ங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்.
*என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை.
*சூரியனை ஒரு முறைகூட முழுசாகப்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது.
*'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானே உன்
கண்கள்.
நன்றி தமிழ்
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>

