![]() |
|
காதல் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல் கவிதைகள் (/showthread.php?tid=5579) |
காதல் கவிதைகள் - தமிழரசன் - 01-28-2005 காதல் கவிதைகள் *அழகான பொருட்களெல்லாம் உன்னை நினைவுபடுத்துகின்றன. உன்னை நினைவுபடுத்துகிற எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன. *உன்னிடம் பேச எவ்வளவு ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும் பேசவேண்டும் என்பதில். *ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக் கொண்டு உன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல் காட்டியதெனக்கு. *சோம்பல் முறிக்கையில் எவ்வளவு அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில் இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ. *அந்தக் காலையில் திரும்பிக்கூடப் பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து போனாய் நீ. அதனாலென்ன ... வாசலுக்குள் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே உன் நிழல். *நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள். நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன் உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக் கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக் கொண்டு போகிறாயே. *எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும் என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும் வைத்திருக்கிறாய். *நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என் தோள்களில் யார்யாரோ து¡ங்கிச் சாய்கிறார்கள் பயணத்தில். *என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என் காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல் போனால் கூட ஒன்றுமில்லை. *சூரியனை ஒரு முறைகூட முழுசாகப் பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன் என்பதில் எப்போதும் சந்தேகம் வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ என்கிற சந்தேகம் மட்டும் வந்து கொண்டேதான் இருக்கிறது. *'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள் சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து கொள்கிற நேரம்கூட உன்னை நான் பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானே உன் கண்கள். நன்றி தமிழ் - kuruvikal - 01-28-2005 நீங்க பெண்கள அணுவணுவா ரசிகிறீங்க...அவங்க உங்களை ரசிக்கிறதாத் தெரியல்லையே...ஏனுங்க...! நாய் வால் இல்லையா...நிமித்த....திருத்த முடியாது போல...எனி நாங்க பெண்களை அழகுப் பதுமையாகக் காட்டி ஒரு வரிதானும் எழுதுவதில்லை...அதற்கும் அவங்களுக்கு வெகுதூரம்...! அற்லீஸ் ஒரு பெண்ணாவது ஆணை வர்ணித்து எழுதியிருக்காளா...திமிர் பிடிச்சவளவ....! அவளவைக்கு நீங்க.....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->பார்த்துப் பார்த்து பூத்துப் பூத்து வரைந்து வரைந்து கொட்டுவதெல்லாம் குப்பையிலே...! வீசுது துர்நாற்றம் மங்கையவள் மனம் போலே...! ஆணின் மனமோ போகுது ஏளனமாய் அவள் பார்வைக்கு...! வீணே கெடுகுது நல்ல நேரம்...! கவிதைக்கு நன்றி...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-28-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அதற்கும் அவங்களுக்கு வெகுதூரம்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏங்க இதைப்புரிந்து கொள்ளவில்லையா..?? பெண்ணுக்கும் அழகிற்கும் வெகுதூரம் என்றால் ஆணுக்கும் அழகிற்கும் சம்பந்தமே இல்லை.. றொம்ப றொம்ப தூரம்.. பிறகேன் பொய் சொல்வான் என்று தான் விட்டிட்டாங்க.. :wink: - Eswar - 01-28-2005 குறிப்பிட்ட ஆண் அழகில்லை எண்டு சொல்லுங்க தமிழினி ஏற்றுக்கொள்கிறேன். ஆனா ஆண்வாக்கமே அழகில்ல எண்டு சொல்ல வெண்டாம். உலகத்தில உள்ள உயிரினங்கள் எல்லாவற்றிலும் ஆண்கள்தான் அழகும் திறமையும் வாய்ந்தன. உ.ம்: ஆண்சிங்கம் ஆண்மான் ஆண்பறவைகள் ஆண்மீன்வகைகள் எங்குமே ஆண்தான் அழகு. கேடுகெட்ட மனித இனம்தான் எங்கேயோ தடம் மாறிப்போச்சு..... - tamilini - 01-28-2005 அப்படியென்றால் குறிப்பிட்ட பெண் அழகில்லை என்று.. சொல்லலாம் தானே.. பெண்கள் அழகில்லை என்று.பொதுவாய். சொல்லும் போது ஆண் அழகில்லை என்றம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 01-28-2005 tamilini Wrote:அப்படியென்றால் குறிப்பிட்ட பெண் அழகில்லை என்று.. சொல்லலாம் தானே.. பெண்கள் அழகில்லை என்று.பொதுவாய். சொல்லும் போது ஆண் அழகில்லை என்றம்.. <!--emo& இவாக்கே சொந்த மூஞ்சியில நம்பிக்கையில்ல...அதுக்க ஆண்களப் பற்றிக் கதைக்க வந்திட்டினம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-28-2005 Quote:இவாக்கே சொந்த மூஞ்சியில நம்பிக்கையில்ல...அதுக்க ஆண்களப் பற்றிக் கதைக்க வந்திட்டினம்...!எங்களுக்கு எங்க மேல நம்பிக்கையிருக்கு.. மு}ஞ்சி மேல எல்லாம் நம்பிக்கை தேவையில்லை.. இப்ப பாருங்க பெண்கள் என்றால்.. எல்லாம் பெண்கள் தானே.. ஐஸ் அக்கா போன்றவர்களும் பெண்கள் தானே.. அவங்கள அழகு என்று ஆராதிக்கிற நீங்க.. பெண்கள் அழகில்லை என்று சொல்லுறீங்களெ..? பாவம் அப்படிப்பட்டவங்க என்று சொல்லவந்தம்.. பிளேட்டை மாத்திப்பொடுவியள்..?? :twisted: :twisted: - kuruvikal - 01-28-2005 tamilini Wrote:Quote:இவாக்கே சொந்த மூஞ்சியில நம்பிக்கையில்ல...அதுக்க ஆண்களப் பற்றிக் கதைக்க வந்திட்டினம்...!எங்களுக்கு எங்க மேல நம்பிக்கையிருக்கு.. மு}ஞ்சி மேல எல்லாம் நம்பிக்கை தேவையில்லை.. இப்ப பாருங்க பெண்கள் என்றால்.. எல்லாம் பெண்கள் தானே.. ஐஸ் அக்கா போன்றவர்களும் பெண்கள் தானே.. அவங்கள அழகு என்று ஆராதிக்கிற நீங்க.. பெண்கள் அழகில்லை என்று சொல்லுறீங்களெ..? பாவம் அப்படிப்பட்டவங்க என்று சொல்லவந்தம்.. பிளேட்டை மாத்திப்பொடுவியள்..?? :twisted: :twisted: ஐஸ் அக்கா...பெண்களுக்க விதிவிலக்கு...அவங்க போல கொஞ்சப் பேர் இருக்காங்க...அவங்க அழகு ரசிக்கக் கூடியாது...மிச்சம்....???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 01-28-2005 தமிழினி திரிஷாவை விட்டுட்டியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-28-2005 Quote:ஐஸ் அக்கா...பெண்களுக்க விதிவிலக்கு...அவங்க போல கொஞ்சப் பேர் இருக்காங்க...அவங்க அழகு ரசிக்கக் கூடியாது...மிச்சம்....???!அப்படி தாங்க.. ஆண்களும்.. ஒருசிலது இருக்கு.. மிச்சம்.. சகிக்க முடியாது.. சோ இதுகளுக்காக எல்லாம் கவிதை எழுதி தங்க ரைம்யை ஏன் வேஸ்ட் பண்ணுவான் என்று நினைக்கிறாங்க.. பெண்கள்.. :wink:
- Niththila - 01-28-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--> அப்படி தாங்க.. ஆண்களும்.. ஒருசிலது இருக்கு.. மிச்சம்.. சகிக்க முடியாது.. சோ இதுகளுக்காக எல்லாம் கவிதை எழுதி தங்க ரைம்யை ஏன் வேஸ்ட் பண்ணுவான் என்று நினைக்கிறாங்க.. பெண்கள்.. :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 01-28-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> ஐஸ் அக்கா...பெண்களுக்க விதிவிலக்கு...அவங்க போல கொஞ்சப் பேர் இருக்காங்க...அவங்க அழகு ரசிக்கக் கூடியாது...மிச்சம்....???! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படி தாங்க.. ஆண்களும்.. ஒருசிலது இருக்கு.. மிச்சம்.. சகிக்க முடியாது.. சோ இதுகளுக்காக எல்லாம் கவிதை எழுதி தங்க ரைம்யை ஏன் வேஸ்ட் பண்ணுவான் என்று நினைக்கிறாங்க.. பெண்கள்.. :wink: <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஏங்க அந்த ஒரு சிலத்துக்காவது எழுதலாமே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aswini2005 - 01-28-2005 கவலைப்படாதையுங்கோ குருவிகள். பெண்கள் ஆண்களின் அழகை விவரிக்காமைக்குக் காரணம் சொல்லப்போனால் குருவிகள் உலகமெங்கும் சுற்றி வந்து லொஜிக் சொல்லும். சோலி ஏனென்று யாழ் களத்தில் பெண்கள் இருக்கிறார்களோ தெரியாது ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி இதோ சில கவித்துளிகள். '1)"அழகன் நீ என் ஆயுளை நீட்டிய அதிசயன் நீ". 2) ஒரு கையெழுத்து அதற்கா இத்தனை சக்தி....! இன்னொரு கையெழுத்திடு உன்னுடன் வாழ்ந்து விடுகிறேன்.'' - kuruvikal - 01-28-2005 இதில என்ன உவமையிங்க போட்டு ஆண்களை விமர்சைச்சு இருக்கு...இது யாரோ சிலர் தங்கள் ஏக்கங்களை எல்லோ கொட்டி இருக்கினம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Niththila - 01-28-2005 அண்ணா கவலைப்படாதேங்கோ நானும் ஒரு கவிதை எழுத தொடங்கினனான் ஆண்களைப் பற்றி இப்படி..... அழ(ழுக்)கே அழ(ழுக்)கே உன்ர பேர் தான் ஆணழ(ழுக்)கனா ஆயிரம் புலவர்களால் வர்ணிக்க முடியா உன் அழ(ழுக்)கை நானும் வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளே வருகுதில்லையே....... இதுக்கங்கால கற்பனை போகுதில்லை விரும்பிறவை தங்கட கவி வரிகளையும் சேர்க்கலாம். 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கவி எண்டா வேறோர் அர்த்தமும் வரும் கவனம்
- kavithan - 01-29-2005 அட அண்ணனை கவுத்திட்டிங்கள் .... தொடருங்கள்.. என்ன குருவிகளே.. இப்போது புரிகிறதா.. தங்கை... எப்படி கவுக்கிறா என்று... வாழ்த்துக்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 01-29-2005 [quote="Niththila"]அண்ணா கவலைப்படாதேங்கோ நானும் ஒரு கவிதை எழுத தொடங்கினனான் ஆண்களைப் பற்றி இப்படி..... அழ(ழுக்)கே அழ(ழுக்)கே உன்ர பேர் தான் ஆணழ(ழுக்)கனா ஆயிரம் புலவர்களால் வர்ணிக்க முடியா உன் அழ(ழுக்)கை நானும் வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளே வருகுதில்லையே....... இதுக்கங்கால கற்பனை போகுதில்லை விரும்பிறவை தங்கட கவி வரிகளையும் சேர்க்கலாம். 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (niththila) அவனோ தன் அன்பானவளிற்காய் வேலைதேடி வெளியே போய் பொருள் தேடி பண்டம்தேடி ஊர்புழுதியெல்லாம் உடலில்பட்டு வீடு வரும்போது அழுக்காய் வந்தவனை குறைந்தபட்சம் குளிக்க வைத்து அழகு பார்க்காமல் அழுக்கா அழுக்கா என்றால்என்ன நியாயம் நித்திலா,??????? - kavithan - 02-02-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-02-2005 Quote:அழகு பார்க்காமல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 02-03-2005 Quote:அவனோ தன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|