Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரபாவின் படத்தை ஜே.வி.பியினர் அடித்து நொறுக்கினர்
#1
பிரபாவின் படத்தை ஜே.வி.பியினர்
காரைதீவில் அடித்து நொறுக்கினர்
மக்கள் ஆத்திரமடைந்ததால் முறுகல் நிலை
காரைதீவு தமிழ்ப்பாடசாலையில் மாட்டப் பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை ஜே.வி.பி யினர் அடித்து நொறுக்கினர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முறு கல் நிலை ஏற்பட்டது. பாடசாலை அதிபர் பெரும் பிரயத்தனத்துடன் ஜே.வி.பியினரை பாடசாலை வளவில் இருந்து வெளியேற்றி நிலைமையைச் சுமுகமாக்கினார்.
இச்சம்பவம் நேற்றுப் பகல் காரைதீவில் இடம்பெற்றது.•
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட காரை தீவு தமிழ் வித்தியாலயத்தைச் சுத்தம் செய்வ தாகக் கூறிக்கொண்டு சுமார் 20 ஜே.வி.பி. தொண்டர்கள் பாடசாலைக்குள் வந்துள்ளனர்.
இவர்கள் பாடசாலையைத் துப்புரவு செய்து கொண்டிருக்கும்போது அங்கே காணப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை எடுத்து ஆத்திரத்துடன் அடித்து உடைத்து நொறுக் கியுள்ளனர்.
ஜே.வி.பியினரின் நடவடிக்கையினால் ஆத்திரமடைந்த மாணவர்களும் பொதுமக்க ளும் ஜே.வி.பியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு சாராருக்கும் இடையில் முறு கல் அதிகரித்து மோதல் ஏற்படும் நிலையேற் பட்டது.
நிலைமையை அவதானித்த பாடசாலை அதிபர், உடனடியாகத் தலையிட்டு மமநிவாரணப் பணியும் வேண்டாம் குழப்பமும் வேண்டாம் இடத்தைக் காலிசெய்யுங்கள்டுடு என்று ஜே.வியி னரை பாடசாலையிலிருந்து வெளியேற்றி விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் பெரும் மோதல் ஒன்று தவிர்க்கப் பட்டது.

Source : Uthayan
Reply


Messages In This Thread
பிரபாவின் படத்தை ஜே.வி.பியினர் அடித்து நொறுக்கினர் - by Vaanampaadi - 01-25-2005, 01:26 PM
[No subject] - by thaiman.ch - 01-25-2005, 02:24 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 01-25-2005, 02:44 PM
[No subject] - by kasthori - 01-25-2005, 02:47 PM
[No subject] - by shiyam - 01-25-2005, 02:51 PM
[No subject] - by tamilini - 01-25-2005, 02:56 PM
[No subject] - by thaiman.ch - 01-25-2005, 03:05 PM
[No subject] - by Niththila - 01-25-2005, 08:37 PM
[No subject] - by Thaven - 01-26-2005, 02:01 AM
[No subject] - by thaiman.ch - 01-26-2005, 09:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)