08-10-2003, 10:25 PM
ENDLF ன் வானொலி TBC ல் இருந்து ஊழியர்கள் வெளியேற்றம்.
ENDLF அமைப்பின் வானொலியான TBC வானொலியில் கடைமையாற்றிய பல ஊழியர்கள் தன்மானத்துடன் வெளியேறியுள்ளனர். இந்தவானொலிப்பணிப்பாளர் தனது இயக்கத்தின் அங்கத்தவர்களாக இந்த வானொலியில் கடமையாற்றுபவர்களை இலங்கையில் ஊடகங்களுடாக பிரகடனப்படுத்தி இவர்கள் இலங்கையின் பல ஆயுத கும்பல்களுடன் சேர இருப்பதாகவும் புலிகளுக்கு எதிராக செயற்பட இருப்பதாகவும் அறிவித்திருற்தார்.
இதுமட்டுமல்லாமல் EPDP PLOTE EPRLF வரதர் அணி போன்ற அமைப்பினருடன் சேர்த்து இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பேச்சுகளிளும் ஈடுபட்டுவந்தார். இதற்காக இலங்கை சென்று பல இராணுவ தலைமைகளுடன் பேச்சுக்களிலும் ஈடுபட்டதுடன் ராசிக்குழுவுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார்.
இதனைக்கண்டறிந்த அறிவிப்பாளர்கள் தாம் வானொலியில் இருந்து உத்தியோகபுூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக வெளியேறிய அறிவிப்பாளர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையின் வெளியிட்டுள்ளனர்.
ஆய்வாளர் கீரன், இளம் அறிவிப்பாளர் காண்டீபன், சந்தைப்படுத்தல் முகாமையாளர் குமார், நிகழ்ச்சிப் பணிப்பாளர் தீபசுதன், புதிய புகழ்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திராயன் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அவ் அறிக்கையில் மேலும் தமக்கும் ENDLF க்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் தம்மை சாட்டி ஊடகத்திற்கு என சேர்த்த பணத்தில் தனது மனைவியின் நகைகளை அடைவு எடுத்து மேலும் பல ஆயிரம் பவுண்டுகள் பணமோசடி செய்து இலங்கை சென்றதாகவும் தாம் கடந்த பல வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமிழ் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணமோசடிக்கும் மிரட்டல்களுக்கும் விலகிய தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மேலும் அந்த அறிக்கை தொடர்ந்து செல்கிறது.
இவ்விடயம் தொடர்பாக விலகிய அறிவிப்பாளர்கள் எமது செய்தி சேவைக்கு தகவல்தரும்போது தாம் தொடர்ந்து பணிப்பாளர் தமிழ் மக்களை வெளிப்படையாக காட்டிக்கொடுத்து வந்ததனாலும் தேசவிரோத செயல்களில் இருந்து விலகமறுத்ததனாலும் ஆராய்ந்து எடுத்த முடிவு என தெரிவித்தனர்.
ஆதாரம் தாயகத்து செய்தித்தளம் தமிழ்ஈழத்தில் இருந்து
ENDLF அமைப்பின் வானொலியான TBC வானொலியில் கடைமையாற்றிய பல ஊழியர்கள் தன்மானத்துடன் வெளியேறியுள்ளனர். இந்தவானொலிப்பணிப்பாளர் தனது இயக்கத்தின் அங்கத்தவர்களாக இந்த வானொலியில் கடமையாற்றுபவர்களை இலங்கையில் ஊடகங்களுடாக பிரகடனப்படுத்தி இவர்கள் இலங்கையின் பல ஆயுத கும்பல்களுடன் சேர இருப்பதாகவும் புலிகளுக்கு எதிராக செயற்பட இருப்பதாகவும் அறிவித்திருற்தார்.
இதுமட்டுமல்லாமல் EPDP PLOTE EPRLF வரதர் அணி போன்ற அமைப்பினருடன் சேர்த்து இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பேச்சுகளிளும் ஈடுபட்டுவந்தார். இதற்காக இலங்கை சென்று பல இராணுவ தலைமைகளுடன் பேச்சுக்களிலும் ஈடுபட்டதுடன் ராசிக்குழுவுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார்.
இதனைக்கண்டறிந்த அறிவிப்பாளர்கள் தாம் வானொலியில் இருந்து உத்தியோகபுூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக வெளியேறிய அறிவிப்பாளர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையின் வெளியிட்டுள்ளனர்.
ஆய்வாளர் கீரன், இளம் அறிவிப்பாளர் காண்டீபன், சந்தைப்படுத்தல் முகாமையாளர் குமார், நிகழ்ச்சிப் பணிப்பாளர் தீபசுதன், புதிய புகழ்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திராயன் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அவ் அறிக்கையில் மேலும் தமக்கும் ENDLF க்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் தம்மை சாட்டி ஊடகத்திற்கு என சேர்த்த பணத்தில் தனது மனைவியின் நகைகளை அடைவு எடுத்து மேலும் பல ஆயிரம் பவுண்டுகள் பணமோசடி செய்து இலங்கை சென்றதாகவும் தாம் கடந்த பல வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமிழ் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணமோசடிக்கும் மிரட்டல்களுக்கும் விலகிய தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மேலும் அந்த அறிக்கை தொடர்ந்து செல்கிறது.
இவ்விடயம் தொடர்பாக விலகிய அறிவிப்பாளர்கள் எமது செய்தி சேவைக்கு தகவல்தரும்போது தாம் தொடர்ந்து பணிப்பாளர் தமிழ் மக்களை வெளிப்படையாக காட்டிக்கொடுத்து வந்ததனாலும் தேசவிரோத செயல்களில் இருந்து விலகமறுத்ததனாலும் ஆராய்ந்து எடுத்த முடிவு என தெரிவித்தனர்.
ஆதாரம் தாயகத்து செய்தித்தளம் தமிழ்ஈழத்தில் இருந்து

