01-14-2005, 01:39 AM
kuruvikal Wrote:சிகரட் பொது இடங்களில் பிடிக்கத்த் தடை வரக் காரணம் புகைப்பிடிப்பவரைக் கட்டுப்படுத்தவல்ல...புகைப்பிடிக்காமல் இருப்பவர் புகைப்பிடிப்பவர் விடும் புகையை உள்ளெடுப்பத்தைக் குறைக்க...அதாவது புகை காற்றோடு கலப்பதைத் தடுக்க முடியாததால்...பொது இடத்தில் அதைப் பிடிக்க வேண்டாம் என் கிறார்கள்...! சினிமா அப்படியல்ல...உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காமல் காட்டாமல் விடலாம்...சினிமா உங்களை எது கொண்டும் வற்புறத்தவில்லையே...சினிமாவைப் பார் என்று...! அப்படி வற்புறுத்தி தீயதைப் பரப்பினால்...உண்மையில் நீங்கள் கேட்பது போல மக்கள் அதை புறக்கணிக்கத்தான் வேண்டும்...சினிமா என்பது விருப்பத்தெரிவு பாடம் போல..விரும்பினால் படி...இல்லா விடில் விட்டுவிடு...! விருப்பத்தெரிவுப் பாடத்தையும் எடுத்துவிட்டு...அது கஸ்டம் என்று புலம்புவது ஏனங்க....!
நீங்க சில பேர் அப்படித்தான் இருப்பதாக எமக்குப்படுகுது...உங்களை நீங்களே இதைக் கேட்டுப்பாருங்கள்..உங்கள் பக்கம் நியாயத்தில் உள்ள போலித்தன்மை புரியும்...!...!
வணக்கம்,
புகைத்தல் ஒரு உயிர்கொல்லி என்று மருத்துவர்கள் சொன்ன பின்னும் ஒரு கூட்டம் புகச்சு கொண்டு இருக்கு. அதை அவர் வீட்டில் வைத்து குடிக்கும் பொளுது. அது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அவர் நான்குபெயருடன் கூடி குடிக்கும் பொளுது அது பொது பிரச்சினை. ஏன் எந்தமனிதனும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது எண்கிறார்கள். அதாவது நானே என்னை அளித்துக்கொள்ளும் உரிமை எனக்கு இல்லை. அப்படி இருக்கயில் பலர் ஒரு நாட்டில் தங்களை அறியாமல் மாய்த்து கொள்ளுவதை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது அல்லவா? அதனால்தான் அவர்கள் பொது இடங்களில் புகைத்தலுக்கு தடை என்றுசொன்னார்கள். இன்னும் ஒரு காரணம் இருக்கின்றது, அதானது புகைத்தலுக்கு அடிமையானவர்களை உடனே அதை நிறுத்த சொன்னால். அதுவே அவர்களுக்கு வேறு நோயை தோற்றுவிக்கலாம் என்பதால் தான். அவர்களை தனிப்பட்ட இடங்களில் புகத்தலுக்கு அனுமதித்து. பொது இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. அதை போலத்தான் தமிழ் திரைபடங்களுக்கு பெரும்பாலான தமிழர்கள் அடிமையாகி இருக்கின்றார்கள். இவர்களை அதில் இருந்து மீட்பதே பெரும் பாடாக உள்ளது. எனவே திரை அரங்குகள் போன்ற பொது இடங்களில், மக்களின் எண்ணங்களை சிதைக்கும் முறையிலான யுக்தியை கையாளுகின்றார்கள். பாலியல் படம் திரையிட தடை, ஆனால் பாலியலும் பாலியல் இல்லாமலும் கொடுக்கின்ற படங்களுக்கு தடையில்லை. கடுகு போர இடம் தெரியும், அனால் பூசனிக்காய் போகும் இடம் இதெரியாது. விளங்குமென நினைக்கின்றேன்.
இண்றய தமிழ் படங்கள் வக்கிரம் நிறைந்தவை, மனித நடமுறைக்கு அப்பாற்பட்டவை. சகோதரி தமிழினி குறிப்பிட்டது போன்று சேரனின், தங்கர்பச்சான், பலுமகேன்ட்ர, பாலச்சந்தார், மகேந்திரன், பாரதிராஜ போன்றவர்களின் சில படங்கள் மக்களுக்கு தேவையானது யதார்த்தமானவயாகவும் இருந்தன. அதனால் தான் சொல்லுகின்றோம். நல்லவற்றை கொடுங்கள் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.
அனால் வியாபாரம் என்னும் போர்வையில், மக்களை ஏமாற்ற நினைத்தால் மக்கள் அதை எதிர்ப்பார்கள்.
அன்புடன்
விதுரன்

