08-10-2003, 03:17 PM
மதிவதனன் தேவையற்ற கதைகளை விடுத்து, நியாயமாக கருத்துக்களைத் தர முற்படுங்கள். எந்த நாட்டில் பாஸ்கள்.. போமுகள்.. நிரப்பப்பாமல்,பிரயாணிகளின்.. பெட்டிகள்.. பைகளை சோதிக்காமல் வெளேயேறவே, உள்நுழையவே விடுகின்றார்கள். நான் கடந்த மாதம் இங்கிருந்து சிறீலங்கா ஊடாக வன்னி யாழ்ப்பாணம் செல்வதற்கு புறப்பட்ட போது இங்கு ஒஸ்லோ விமான நிலையத்திலே எனது பொருட்கள் அனைத்தும் Scan செய்யப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா. முட்டாள் தனமாக இங்கு வாதிடத் தேவையில்லை.

