01-13-2005, 09:21 AM
kuruvikal Wrote:நாங்கள் சொல்லக் கூடியது இதுதான் சினிமா சமூகத்தில் உண்டு பண்ணும் தாக்கம் என்பது சமூகத்தில் எங்கேயோ நடக்கும் சமூகச் சீரழிவென்றை எல்லோருக்கும் அறியத்தருவதும்....அது துரிதமாக தாழ் நிலை சிந்தனை கொண்டவர்களை சென்றடைய உதவுவதும் தான்....! அதனால் சமூகச் சீரழிவு என்பது கொஞ்சம் விரைபு படுத்தப்படலாமே அன்றி அதுதான் சமூகத்தைச் சீரழிக்கிறது என்று கூறமுடியாது..சினிமா இல்லாவிட்டாலும் சமூகச் சீரழிவு நிகழத்தான் செய்யும்..என்ன வேகம் குறைவாக இருக்கலாம்...அதற்கு முக்கிய காரணம் சினிமாவைவிட சமூகத்தில் உள்ள தாழ்நிலை சிந்தனை உள்ள மனிதர்களே....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்த திரை பற்றிய தலைப்பில் உங்கள் கருத்துக்கள் பலவற்றுடன் எனக்கு உடன்பாடு இல்லை குருவிகளே. நீங்கள் இங்கே குறிப்பிடுவதை போல. ஒரு தாக்கம் என்பது அது இயற்கையாக நிகளட்டுமே, அதையேன் இந்த திரையுலக அறிவிலிகள் வலிந்து ஒரு செயற்ற்கையாக்கி, சமூக வீழ்ச்சியின் முக்கிய குற்றவாழி ஆகின்றார்கள்?
ஒரு ஒளிகருவியினூடாக படம் பிடிப்பது தான் திரை என்று யாராவது அர்தம் கொண்டு படம் எடுத்தால், அது நீங்கள் இங்கு குறிப்பிடுவதை போலவே நிகளும். சமூகத்தில் விழிப்பில்லாத மக்களை, இருளில் இருந்து அந்த அறியாமையுள்ள மக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருதலே ஒரு ஊடகத்தின் சிறந்த பங்காக இருக்க முடியும். அதை விடுத்து, இல்லை, எனது வியாபாரத்திற்கே பயன் படுத்துவேன் என அடம்பிடித்தால். தன்னலமுடய மனிதன் தன் வள்ர்சியினை மேற்கொள்ள, சமூகத்தை தவறான முறயில் பயன் படுத்துபவனாக எண்ணி, அந்த மனிதனின் ஆக்கங்களை சாமூகம் புறம் தள்ளுவதே சரியானதாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.
அன்புடன்
விதுரன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 