01-12-2005, 01:37 PM
நான் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பு பக்கத்துவீட்டில் ஒரு பெண்மணி வசிக்கிறார் வயது 66 (பிரெஞ்சுகாரி) நான் வேலைமுடிந்து அதிகாலை 2 மணிக்குதான் வருவது வழக்கம்.வந்து உணவை சுடாக்கிகொண்டு சாப்பிடும்போதுதான் கொஞசநேரம் தொலைக்காட்சி பார்ப்பது வழக்கம் சிலநேரம் தமிழ் படம்பார்த்தால். படம்முடிய 4 மணி ஆகிவிடும். இதனால் எனக்கும் பக்கத்துவீட்டுகார பெண்மணிக்கும் சிலநேரங்களில் சண்டைவருவதுண்டு. காலையில் கதவை தட்டி இரவுநீ சத்தம்போட்டாய் எனக்கு தூக்கம் வரவில்லை என்பார் நான்.உனக்கு தூக்கம் லராவிட்டால் நான் ஒன்றும்செய்யமுடியாது.போ என்றுசொல்வதுண்டு.இதனால் சிலநேரங்களில் வெளியே போகும்போது எதிரேவந்தால் இருவரும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே ஒப்பிற்கு ஒரு வணக்கம் மட்டும் செல்லிவிட்டுபோவதுண்டு.கடந்த 3 கிழமையாக அவரை காணவில்லை நானும் துன்பம்விட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நேற்று மாலை நான் வேலைக்கு படிவழியே இறங்கிகொண்டிருந்தபோது எதிரே அந்தபெண்மணி தனது நாயுடன் வந்துகொண்டிருந்தார்.என்னைகண்டதும் வணக்கம் புதுவருட வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு தான் புதுவருட கொண்டாட்டங்களிற்காக பிள்ளைகளிடம் போயிருந்ததாகவும்.அப்போ சுனாமி அனத்தத்தை தொலைகாட்சியில் பார்த்ததாகவும் உடனே என்னைதான் நினைத்ததாகவும் கூறி நாட்டில் எனது குடும்பம் நன்றாக இருக்கிறதா என விசாரித்தார்.நானும் எனது குடும்பத்திற்கு எதுவுமில்லை அவர்கள் வடபகுதியில கடற்கரையிலிருந்து தூரத்தில் இருக்கிறார்கள் ஆனால் எம்மவர் 15000பேர்வரை இழந்துவிட்டோம் எனதுநண்பர்கள் தங்கள் குடும்பததைஇழந்துவிட்டார்கள் என்றேன்.அவர்களிற்குஏதும் உதவினாயா? என்று கேட்டார் நானும் என்னால்முடிந்ததை எங்கள் தொண்டு நிறுவனம்ஒன்றினுடாக செய்திருக்கிறேன் என கூறிவிட்டு போய்விடடேன்.இனறுகாலை 9 மணிக்கு வீட்டின் அழைப்புமணி அடித்தது.நானும் யார்ரா காலங்காத்தாலை நித்திரையை குழப்பிறது எண்டு யோசித்தவாறே கதவு துவாரத்தால் பார்த்தேன் பக்கத்து வீட்டு பொண்மணி.போச்சுடா நான்இரவு சத்தம்போடவில்லையே பிறகு என்மனிசி வந்திருக்கு என்று நினைத்தவாறே எரிச்சலுடன் கதவை திறந்து என்னவோணும் என்றுகோட்டேன்.அவர்கையில்ஒரு உறையைதந்து இந்தா என்னாலான சிறு உதவி உங்கள் நாட்டிற்கு உங்கள் நிறுவனத்தினுடாக அனுப்பிவிடு. என்று செல்லிதந்து விட்டு தனது நாயுடன் கதை;தவாறே படிவழியே இறங்கி போய்கொண்டிருந்தார்.உறையை பிரித்துபார்த்தேன் 200 ஈரோக்கள் இருந்தது.அப்படியே வந்து கட்டிலில் விழுந்தேன் பின்னர் நித்திரை வரவில்லை இனிமேல் இரவில் தொலைகாட்சி சத்தமாய் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன்
; ;

