01-09-2005, 09:26 AM
சென்னை: "தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநில எல்லையோரங்களில் இன்றோ நாளையோ லேசான நிலஅதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.ஆனாலும் இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,' என்று சென்னைப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
சென்னை, பல்கலைக் கழகத்தின் புவியியல் அமைப்பு சார்பில் நில அதிர்வு குறித்து ஆராய்சியில் ஒரு குழு ஈடுபட்டிருந்தது. இக்குழுவில் டாக்டர் ராஜேஸ்வர ராவ், டாக்டர் கே.கே.சர்மா, டாக்டர் பி.பெரியகாளை ஆகியோர் உள்ளனர். இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லையோரங்களில் இன்று மாலை ஆறு மணியில் இருந்து மறு நாள் காலை ஆறு மணிவரை, ஏதேனும் ஒரு நேரத்தில் நில அதிர்வு ஏற்படும். இந்த நில அதிர்வை பொதுமக்கள் உணர முடியாது. இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த நில அதிர்வு 4.5 ரிக்டர் அளவில் இருக்கும் என்றும் அவர்கள் தரிவித்துள்ளனர்.
சென்னை, பல்கலைக் கழகத்தின் புவியியல் அமைப்பு சார்பில் நில அதிர்வு குறித்து ஆராய்சியில் ஒரு குழு ஈடுபட்டிருந்தது. இக்குழுவில் டாக்டர் ராஜேஸ்வர ராவ், டாக்டர் கே.கே.சர்மா, டாக்டர் பி.பெரியகாளை ஆகியோர் உள்ளனர். இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லையோரங்களில் இன்று மாலை ஆறு மணியில் இருந்து மறு நாள் காலை ஆறு மணிவரை, ஏதேனும் ஒரு நேரத்தில் நில அதிர்வு ஏற்படும். இந்த நில அதிர்வை பொதுமக்கள் உணர முடியாது. இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த நில அதிர்வு 4.5 ரிக்டர் அளவில் இருக்கும் என்றும் அவர்கள் தரிவித்துள்ளனர்.

