01-08-2005, 04:39 PM
அமெரிக்கப் படைகளை வெளியேற்ற ஹக்கீம் அரபு நாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சு - முஸ்லீம்கள் ஆயுதம் ஏந்தும் நிலை.
இலங்கை நிவாரண உதவிகளையும் புனரமைப்பு உதவிகளையும் செய்யப்போவதாக நுளைந்துள்ள அமெரிக்கப் படைகள் நீண்டகாலத்திற்கு நிலைகொள்ளப் போவதாகவும் அதன் எண்ணிக்கையிலும் பலமடங்கு அதிகரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் இதனை எதிர்த்துப் போரிடுவதற்காக உலக அரபு நாடுகளின் தூதுவர்களைக் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சவுதி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எகிப்த்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பாகீஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மலேசியா மற்றும் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அமரிக்கப் படைகளின் வருகையினைக் கடுமையாகச் சாடிய ஹக்கீம் அரபு நாடுகளின் உதவியினூடாக அமெரிக்கப் படைகளுக்கு எதிராக இலங்கையில் செயற்படப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப்போரிடுவதற்குக் கிழக்கு மாகாணத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் ஒசாமா குழு மற்றும் பல முஸ்லீம் மதக்குழுக்கள் தயாராகி வருவதாகவும் இதனைக் கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமெரிக்கப் படைகள் கிழக்கு மாகாணத்திற்குச் சென்று வந்ததாக அறியமுடிகிறது.
இதேநேரம் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தால் மாக்சிசத்தைப் பின்பற்றும் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் களத்தில் குதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம் இன்று மட்டக்களப்பில் பள்ளிவாசலொன்றில் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டமொன்றில் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராட்டங்களை நடாத்துவதென்று முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் முடிவெடுத்துள்ளனர்.
நன்றி:நிதர்சனம்
இலங்கை நிவாரண உதவிகளையும் புனரமைப்பு உதவிகளையும் செய்யப்போவதாக நுளைந்துள்ள அமெரிக்கப் படைகள் நீண்டகாலத்திற்கு நிலைகொள்ளப் போவதாகவும் அதன் எண்ணிக்கையிலும் பலமடங்கு அதிகரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் இதனை எதிர்த்துப் போரிடுவதற்காக உலக அரபு நாடுகளின் தூதுவர்களைக் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சவுதி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எகிப்த்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பாகீஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மலேசியா மற்றும் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அமரிக்கப் படைகளின் வருகையினைக் கடுமையாகச் சாடிய ஹக்கீம் அரபு நாடுகளின் உதவியினூடாக அமெரிக்கப் படைகளுக்கு எதிராக இலங்கையில் செயற்படப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப்போரிடுவதற்குக் கிழக்கு மாகாணத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் ஒசாமா குழு மற்றும் பல முஸ்லீம் மதக்குழுக்கள் தயாராகி வருவதாகவும் இதனைக் கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமெரிக்கப் படைகள் கிழக்கு மாகாணத்திற்குச் சென்று வந்ததாக அறியமுடிகிறது.
இதேநேரம் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தால் மாக்சிசத்தைப் பின்பற்றும் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் களத்தில் குதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம் இன்று மட்டக்களப்பில் பள்ளிவாசலொன்றில் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டமொன்றில் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராட்டங்களை நடாத்துவதென்று முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் முடிவெடுத்துள்ளனர்.
நன்றி:நிதர்சனம்

