01-04-2005, 03:28 PM
இலங்கைக்கு அமெரிக்கப்படைகள் வரவிருப்பதுகுறித்து
இந்தியா பிரச்சினை கிளப்பவில்லை
கடற்கோளினால் பெரும் அவலத்துக்குள்ளாகியிருக்கும் இலங்கையில் அவசர நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கப் படைகள் வரவிருப்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா பிரச்சினை எதையும் கிளப்பவில்லை என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.
நிவாரணப் பணிகளில் அமெரிக்கப் படைகளை ஈடுபடுத்துவதென்பது முற்றிலுமே இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இடையேயான விவகாரமாகும். இலங்கை அரசாங்கம் தெரியப்படுத்தியிருப்பதற்கிணங்க தேவைகளின் அடிப்படையில் மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமுகமாக இந்தியா எதிர்வரும் நாட்களிலும் மாதங்களிலும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் நக்மா மாலிக்இ நிவாரணப் பணிகளில் நெருக்கடியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இலங்கையில் பணியாற்றும் பல்வேறு நிவாரண உதவிக் குழுக்களிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது முக்கியம் என்றும் இந்திய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
விசேட ஹெலிகொப்டர் பிரிவு ஒன்றுடன் கூடிய மினி விமானந்தாங்கிக் கப்பலான யூ.எஸ்.எஸ்.போன்ஹொமி றிச்சார்ட்டில் இருக்கும் 1இ500 அமெரிக்க கடல் சார் படையணியினர் (-ச்ணூடிணஞுண்) இலங்கைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் நேற்று முன்தினம் ஞாயின்று 200 அமெரிக்கப் படையினர் இலங்கையில் வந்திறங்குவர் என்று கூறப்பட்டபோதிலும் இதுவரை அவர்கள் வந்து சேர்ந்ததாக இல்லை. எனினும்இ 60 அமெரிக்க இராணுவத்தினர் (கடல் சார் படையணி அல்ல) நேற்று கொழும்புக்கு வந்து சேர்ந்திருப்பதாக அறிய வருகிறது.
இதேவேளைஇ இலங்கையின் தெற்கிற்கும்இ கிழக்குக்கும் மிதக்கும் ஆஸ்பத்திரி ஒன்று உட்பட 7 கடற்படைக் கப்பல்களை அனுப்பி வைத்திருக்கும் இந்தியா நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.
இந்திய விமானப் படையின் இரண்டு எம்.ஐ.8 ஹெலிகொப்டர்கள் வடக்கில் யாழ்ப்பாணத்துக்கும்இ கிழக்கில் திருகோணமலைக்கும் பெருமளவு கூடாரங்களை ஏற்றிக் கொண்டு சென்றிருப்பதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மனிதாபிமான உதவிப் பணிகளுக்கான தரைச் செயற்பாடுகளுக்கு பொறுப்பானவராக விளங்கும் உலகப் பொருளாதார அமைப்பின் அனர்த்த வளங்கள் கட்டமைப்பின் பணிப்பாளரான கிறிஸ் வீக்ஸ் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை அறிவித்தது. பிரிட்டன் ஒரு சி -130 விமானத்தை அனுப்புவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் லீக்ஸ் தெரிவித்தார்.
நன்றி: தினக்குரல்
இந்தியா பிரச்சினை கிளப்பவில்லை
கடற்கோளினால் பெரும் அவலத்துக்குள்ளாகியிருக்கும் இலங்கையில் அவசர நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கப் படைகள் வரவிருப்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா பிரச்சினை எதையும் கிளப்பவில்லை என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.
நிவாரணப் பணிகளில் அமெரிக்கப் படைகளை ஈடுபடுத்துவதென்பது முற்றிலுமே இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இடையேயான விவகாரமாகும். இலங்கை அரசாங்கம் தெரியப்படுத்தியிருப்பதற்கிணங்க தேவைகளின் அடிப்படையில் மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமுகமாக இந்தியா எதிர்வரும் நாட்களிலும் மாதங்களிலும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் நக்மா மாலிக்இ நிவாரணப் பணிகளில் நெருக்கடியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இலங்கையில் பணியாற்றும் பல்வேறு நிவாரண உதவிக் குழுக்களிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது முக்கியம் என்றும் இந்திய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
விசேட ஹெலிகொப்டர் பிரிவு ஒன்றுடன் கூடிய மினி விமானந்தாங்கிக் கப்பலான யூ.எஸ்.எஸ்.போன்ஹொமி றிச்சார்ட்டில் இருக்கும் 1இ500 அமெரிக்க கடல் சார் படையணியினர் (-ச்ணூடிணஞுண்) இலங்கைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் நேற்று முன்தினம் ஞாயின்று 200 அமெரிக்கப் படையினர் இலங்கையில் வந்திறங்குவர் என்று கூறப்பட்டபோதிலும் இதுவரை அவர்கள் வந்து சேர்ந்ததாக இல்லை. எனினும்இ 60 அமெரிக்க இராணுவத்தினர் (கடல் சார் படையணி அல்ல) நேற்று கொழும்புக்கு வந்து சேர்ந்திருப்பதாக அறிய வருகிறது.
இதேவேளைஇ இலங்கையின் தெற்கிற்கும்இ கிழக்குக்கும் மிதக்கும் ஆஸ்பத்திரி ஒன்று உட்பட 7 கடற்படைக் கப்பல்களை அனுப்பி வைத்திருக்கும் இந்தியா நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.
இந்திய விமானப் படையின் இரண்டு எம்.ஐ.8 ஹெலிகொப்டர்கள் வடக்கில் யாழ்ப்பாணத்துக்கும்இ கிழக்கில் திருகோணமலைக்கும் பெருமளவு கூடாரங்களை ஏற்றிக் கொண்டு சென்றிருப்பதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மனிதாபிமான உதவிப் பணிகளுக்கான தரைச் செயற்பாடுகளுக்கு பொறுப்பானவராக விளங்கும் உலகப் பொருளாதார அமைப்பின் அனர்த்த வளங்கள் கட்டமைப்பின் பணிப்பாளரான கிறிஸ் வீக்ஸ் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை அறிவித்தது. பிரிட்டன் ஒரு சி -130 விமானத்தை அனுப்புவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் லீக்ஸ் தெரிவித்தார்.
நன்றி: தினக்குரல்

