01-04-2005, 02:59 AM
இலங்கையிலிருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் - இந்தியா
இலங்கையிலிருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று இந்தியா ஊடகம் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பத்திரிகையான இந்துஸ்தான் ரைம் என்டிரிவி ஆகிய இணையங்களின் ஊடாக இக்கோரிக்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கையரசு இரகசியமாக அமெரிக்கப் படைகளை வருவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக உடனடியாக இந்தியாவிற்கு இலங்கை அரசு அறிவிக்கத் தவறியுள்ளது. அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேறுவதே சிறந்தது.
இவர்கள் தொடர்ந்து நிலைகொள்வார்களாக இருந்தால் இந்தியாவின் அயல் நாடுகள் மீதான உறவுகளில் பாரிய மாற்றம் எற்படும் என்பதனையும் எமது கடுமையான கண்டனத்தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:நிதர்சனம்
இலங்கையிலிருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று இந்தியா ஊடகம் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பத்திரிகையான இந்துஸ்தான் ரைம் என்டிரிவி ஆகிய இணையங்களின் ஊடாக இக்கோரிக்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கையரசு இரகசியமாக அமெரிக்கப் படைகளை வருவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக உடனடியாக இந்தியாவிற்கு இலங்கை அரசு அறிவிக்கத் தவறியுள்ளது. அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேறுவதே சிறந்தது.
இவர்கள் தொடர்ந்து நிலைகொள்வார்களாக இருந்தால் இந்தியாவின் அயல் நாடுகள் மீதான உறவுகளில் பாரிய மாற்றம் எற்படும் என்பதனையும் எமது கடுமையான கண்டனத்தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:நிதர்சனம்

