01-02-2005, 12:32 AM
<b>யாழ்ப்பாணத்தில் 300 அமெரிக்கப் படையினர் தளமிடுவர்?</b>
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்தடையவுள்ள சுமார் இரண்டாயிரம் விசேட படையினரும் இலங்கையின் பல பாகங்களிலும் தமது படைமுகாம்களை அமைக்கலாமென்று அறியமுடிகிறது. விசேட யுத்தக்கப்பல்கள் விமானம்தாங்கிக் கப்பல்கள் ஆகியவற்றுடன் அழிவுற்ற மக்களை மீட்கும் பணியென்று கூறிக்கொண்டு வருகைதரும் அமெரிக்கப்படைகள் காலி திருகோணமலை கொழும்பு யாழ்பாணம் ஆகிய இடங்களில் பிரதான இராணுவத் தளங்களை நிறுவுமென்றும் யாழ்ப்பாணத்திற்கான விசேட அமெரிக்க படைப்பிரிவு பலாலிக்கு விமானம் மூலமாக அனுப்பப்படலாமென்று எதிர்வு கூறப்படுகிறது.
இவர்கள் பருத்தித்துறை நாகர்கோவில் உட்பட கடற்கரையோரங்களில் சிறு குழுக்களாக தொழில்படலாமென்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் அமெரிக்காவிற்கு மறைமுக அச்சறுத்தலைக் கொடுக்கம் நோக்குடன் இந்தியா உடனடியாகப் பத்துக்கு மேற்பட்ட யுத்தக்கப்பல்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதுடன் இந்தியக்கடற்படையும் தமது தீவிர தரையிறக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை சந்தர்ப்பமாக வைத்து இந்தியப்படைகள் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க செய்தி நிறுவனமான சி.என்.என். தனது கவனத்தை அதிகம் இந்தியக் கடற்படையினரின் பக்கம் திருப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் சி.என்.என். தொலைகாட்சியின் விசேட ஊடகவியளாளர்; தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நிலக்கண்ணிவெடி காரணமாக வழித்துணையுடன் இன்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகவலை சீ.என்.என் தெரிவித்துள்ளது.
நன்றி: நிதர்சனம்
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்தடையவுள்ள சுமார் இரண்டாயிரம் விசேட படையினரும் இலங்கையின் பல பாகங்களிலும் தமது படைமுகாம்களை அமைக்கலாமென்று அறியமுடிகிறது. விசேட யுத்தக்கப்பல்கள் விமானம்தாங்கிக் கப்பல்கள் ஆகியவற்றுடன் அழிவுற்ற மக்களை மீட்கும் பணியென்று கூறிக்கொண்டு வருகைதரும் அமெரிக்கப்படைகள் காலி திருகோணமலை கொழும்பு யாழ்பாணம் ஆகிய இடங்களில் பிரதான இராணுவத் தளங்களை நிறுவுமென்றும் யாழ்ப்பாணத்திற்கான விசேட அமெரிக்க படைப்பிரிவு பலாலிக்கு விமானம் மூலமாக அனுப்பப்படலாமென்று எதிர்வு கூறப்படுகிறது.
இவர்கள் பருத்தித்துறை நாகர்கோவில் உட்பட கடற்கரையோரங்களில் சிறு குழுக்களாக தொழில்படலாமென்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் அமெரிக்காவிற்கு மறைமுக அச்சறுத்தலைக் கொடுக்கம் நோக்குடன் இந்தியா உடனடியாகப் பத்துக்கு மேற்பட்ட யுத்தக்கப்பல்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதுடன் இந்தியக்கடற்படையும் தமது தீவிர தரையிறக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை சந்தர்ப்பமாக வைத்து இந்தியப்படைகள் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க செய்தி நிறுவனமான சி.என்.என். தனது கவனத்தை அதிகம் இந்தியக் கடற்படையினரின் பக்கம் திருப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் சி.என்.என். தொலைகாட்சியின் விசேட ஊடகவியளாளர்; தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நிலக்கண்ணிவெடி காரணமாக வழித்துணையுடன் இன்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகவலை சீ.என்.என் தெரிவித்துள்ளது.
நன்றி: நிதர்சனம்

