12-29-2004, 08:43 AM
இன்று எமது நகரப்பகுதியிலே தற்செயலாக ஜேர்மானிய என் ரீ வீ செய்தி தொலைக்காட்சி நிறுவனரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எமது தாயக அனர்த்தம் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறினோம்.
அந்த அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளை விடுத்து அதிகம் பாதிக்கப்படாத தென்னிலங்கை செய்திகளைசெய்திகளை மட்டும் ஒலிபரப்பியத்தற்காக அவர்களுடன் சற்று காரசாரமாக விவாதித்தோம்.
தமிழ்த்தேசியத்தையும் சிங்கள இனவாததையும் பற்றி எடுத்துக் கூறினோம். இற்றைக்கு 20 வருடங்களாக நடக்கும் இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றி தாங்கள் நன்றாகவே அறிவோம் என்றும் இதனாலே நாம் தெரிவித்த கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
தாங்கள் ஓர் செய்தி விவரணமே தயாரித்தாகவும், அதனால் அவர்களின் செய்தி சேகரிப்பாளர் தலைநகரில் தன் தங்குமிடத்திற்கு அருகில் கண்முன்னே கண்ட காட்சிகளை மட்டும் படமாக்கியதால் ஆரம்பத்தில் அவைகளையே ஒளிபரப்பியதாகவும் தாங்கள் ஓர் செய்தி ஸ்தாபனம் ஆகையால் தாங்கள் நடுநிலமையாய் தான் செய்ற்படுவோம் என கூறினர்.
தாங்கள் சகல பாதிக்கப்பட்ட நாடுகளைப்பற்றி ஆவணப்படம் ஒன்றை தயாரிக்கிறோம் என்றும் அதிலே இலங்கையிலே ஏற்பட்ட சகல பாதிப்புக்களையும் உள்ளிட்டு தான் செய்யப்படுகிறது என்றும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையில் இந் நிறுவனமும் பாரிய நிதி சேகரிப்பில் ஈடுபடுவதால் அது பற்றியும் கதைத்தோம். அவர்களும் உதவிகள் யாவும் வழமை போல் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்றடையக் கூடிய வகையில் வழங்கப்படும் எனவும், இவைகள் தனிப்பட்ட முறையில் அரசாங்கத்திடமோ அல்லது தனிப்பட்டவர்களிடமோ வழங்கப்படமாட்டாது என கூறினர்.
எமது தாயக அனர்த்தம் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறினோம்.
அந்த அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளை விடுத்து அதிகம் பாதிக்கப்படாத தென்னிலங்கை செய்திகளைசெய்திகளை மட்டும் ஒலிபரப்பியத்தற்காக அவர்களுடன் சற்று காரசாரமாக விவாதித்தோம்.
தமிழ்த்தேசியத்தையும் சிங்கள இனவாததையும் பற்றி எடுத்துக் கூறினோம். இற்றைக்கு 20 வருடங்களாக நடக்கும் இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றி தாங்கள் நன்றாகவே அறிவோம் என்றும் இதனாலே நாம் தெரிவித்த கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
தாங்கள் ஓர் செய்தி விவரணமே தயாரித்தாகவும், அதனால் அவர்களின் செய்தி சேகரிப்பாளர் தலைநகரில் தன் தங்குமிடத்திற்கு அருகில் கண்முன்னே கண்ட காட்சிகளை மட்டும் படமாக்கியதால் ஆரம்பத்தில் அவைகளையே ஒளிபரப்பியதாகவும் தாங்கள் ஓர் செய்தி ஸ்தாபனம் ஆகையால் தாங்கள் நடுநிலமையாய் தான் செய்ற்படுவோம் என கூறினர்.
தாங்கள் சகல பாதிக்கப்பட்ட நாடுகளைப்பற்றி ஆவணப்படம் ஒன்றை தயாரிக்கிறோம் என்றும் அதிலே இலங்கையிலே ஏற்பட்ட சகல பாதிப்புக்களையும் உள்ளிட்டு தான் செய்யப்படுகிறது என்றும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையில் இந் நிறுவனமும் பாரிய நிதி சேகரிப்பில் ஈடுபடுவதால் அது பற்றியும் கதைத்தோம். அவர்களும் உதவிகள் யாவும் வழமை போல் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்றடையக் கூடிய வகையில் வழங்கப்படும் எனவும், இவைகள் தனிப்பட்ட முறையில் அரசாங்கத்திடமோ அல்லது தனிப்பட்டவர்களிடமோ வழங்கப்படமாட்டாது என கூறினர்.

