12-27-2004, 07:38 AM
<span style='font-size:22pt;line-height:100%'>
பதில் சொல்லம்மா..விடை கூறம்மா..
அம்மா,
உனை நம்பி நின்றோமே
குலத்தெய்வமாய் இருந்தவளே
குலத்தையே அழித்துவிட்டாயே
சொல்லென்னா சோதனைகள்
சொல்லி அழுதோமே உன்னிடமே
தட்டிக் கொடுத்த நீயே
எம் உயிர்களை எடுத்துக் கொண்டாயே
பட்ட காலிலே படும்
கெட்ட குடியே கெடும்
உதாரணம் நாமாய்
காரணம் நீயாய்
கடலம்மா என காதலித்தோம்
கதறி அழ வைத்துவிட்டாயே
அம்மா என அழைத்த எம்மை
அய்யோ என கதற வைத்துவிட்டாயே
முழு மூச்சாய் போராடும் வீரர்களின்
மூச்சை நீயே நிறுத்திவிட்டாயே
நியாயம் எங்கே போயிற்று
எம் ஊரே நிர்மூலம் ஆயிற்றே
பதில் சொல்லம்மா..விடை கூறம்மா..
தமிழ்.நிலா</span>
பதில் சொல்லம்மா..விடை கூறம்மா..
அம்மா,
உனை நம்பி நின்றோமே
குலத்தெய்வமாய் இருந்தவளே
குலத்தையே அழித்துவிட்டாயே
சொல்லென்னா சோதனைகள்
சொல்லி அழுதோமே உன்னிடமே
தட்டிக் கொடுத்த நீயே
எம் உயிர்களை எடுத்துக் கொண்டாயே
பட்ட காலிலே படும்
கெட்ட குடியே கெடும்
உதாரணம் நாமாய்
காரணம் நீயாய்
கடலம்மா என காதலித்தோம்
கதறி அழ வைத்துவிட்டாயே
அம்மா என அழைத்த எம்மை
அய்யோ என கதற வைத்துவிட்டாயே
முழு மூச்சாய் போராடும் வீரர்களின்
மூச்சை நீயே நிறுத்திவிட்டாயே
நியாயம் எங்கே போயிற்று
எம் ஊரே நிர்மூலம் ஆயிற்றே
பதில் சொல்லம்மா..விடை கூறம்மா..
தமிழ்.நிலா</span>
[size=16][b].

