Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்...
#1
<span style='font-size:27pt;line-height:100%'><b>மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்</b>

அழிவதற்கு பிறந்தோமா - என்றும்
அழுவதற்கே பிறந்தோமா?
இன்னல்களில் இடிபாட்டே - நாம்
இறுதி கண்டுவிடுவோமா?

நடுக்கடலிற்கு போனாலும் - நாய்க்கு
நக்க தண்ணி.. - சிறுவயதில்
என்றோ காதில் விழுந்தவை அனைத்தும் - இன்று
நினைவில் வந்து தொலைக்கின்றதே

யுத்ததில் சிந்தி மீதம் இருந்த ரத்தம்
இன்று கடலோடு கடலாய்
ஊர் விட்டு ஊர் வந்தோர் - இன்று
உலகதிதை விட்டே சென்றது ஏன்?

எதை சொல்லி எம் உறவுகளை ஆற்ற?
வார்த்தைகள் மனதிலும் இல்லாது போயிற்றே
காலனவன் கொண்டானா? - இதற்கு
காலமது பதில் கூறுமா?

பிணமேடாய் கைக்குழந்தைகள்
கதறி அழும் ஆண், பெண்கள்
இதே எம் எதிர்கால தூண்கள்
கடலோடு கடலாய்

பக்கத்தில் இல்லையே
பரிவோடு உமை அணைக்க
கிட்டத்தில் இல்லையே
தோளோடு தோள் கொடுக்க

எம்மால் ஆனது எது?
சிந்திப்போம்..சற்றே சிந்திப்போம்
நாளை எமக்கிந்த நிலை வரில்????
எமை தாங்கும் தூண்களை - இன்று
நாம் தாங்குவோம்.

தமிழ்.நிலா</span>

எமை இங்கு தவிக்கவிட்டு காலனின் கோரத்தில் சிக்கி இறையடி சேர்ந்த உயிர்களுக்காய்...
[size=16][b].
Reply


Messages In This Thread
மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்... - by thamizh.nila - 12-27-2004, 06:12 AM
[No subject] - by thamizh.nila - 12-27-2004, 06:50 AM
[No subject] - by thamizh.nila - 12-27-2004, 07:38 AM
[No subject] - by kavithan - 12-27-2004, 08:10 AM
[No subject] - by KULAKADDAN - 12-27-2004, 01:19 PM
[No subject] - by Mathan - 12-27-2004, 08:53 PM
[No subject] - by Aalavanthan - 12-28-2004, 12:41 AM
[No subject] - by வெண்ணிலா - 12-28-2004, 04:51 AM
[No subject] - by thamizh.nila - 12-28-2004, 06:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)