12-22-2004, 01:57 AM
////////////புலிகள் ஆதரவாளராக நடிக்கிறார்களா?
குரல் தரவல்ல அதிகாரிகள்//////////////
அன்பு வணக்கங்கள் பிபிசி அண்ணன் அவர்களே!
உங்களின் இப்படியான கருத்து சிலரை பண்படுத்தியும் சிலரை புண்படுத்தியும் இருக்கலாம். நான் புண் பட்டவர்கள் சார்பாகவே எனது கருத்தினை முன் வைதிட எண்ணியுள்ளேன். நீங்கள் எந்த தளத்தில் இருந்து உங்கள் கருத்தை முன் வைதீர்களோ எனக்கு தெரியாது. இருந்த போதிலும் உங்கள் கருத்திற்கு எனது கருத்தினை முன் வைக்க விரும்புகின்றேன்.
நீங்கள் கூறியது போலவே உங்கள் நண்பன் முன்பு தமிழீழத்தில் இருந்தபொழுது அவர் விடுதலையின் பால் பற்று இல்லாதவராகவும் தற்பொழுது வெளிநாட்டிற்கு வந்த பின் அவர் (உங்களின் நண்பன்) புலம்பெயர் நாடொன்றில் அவரின் புகழ்சிக்காக தன்னை ஒரு விடுதலைப் புலி ஆதரவாளன் போல அவர் காட்டிட முனைகின்றார் என்றும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.
ஒன்றை நீங்கள் கவனதில் கொள்ளுங்கள், ஒரு நாட்டில் எல்லா மக்களும் விளிப்புணர்வோடு இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூகத்தில் வெவ்வேறு துறையில் சிறப்புடயவனாக விளங்குகின்றான். எனவே இவர்களின் அனைத்து திறன்களையும் ஒன்றுபடுத்தி செயற்படுவதனால் தான் அந்த சமூகம் சிறக்க முடிகின்றது. அன்று உங்கள் நண்பன் சிந்திக்காத ஒன்றை அவர் இன்று சிந்திக்கின்றார் என்பதனை இட்டு நீங்கள் மகிழ்ந்தல்லவா இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து அவரிடம் குறைகாண முற்படாதீர்கள். இன்று நீன்கள் முன்வந்து செய்ய முடியாத ஒன்றை அவர் செய்கின்றாரே அதை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
கால் கை விறைக்க குளிரில் நடந்து சேவை செய்த பின் உங்களை போன்றவர்களின் சொல்லடிகளுக்குள் அகப்பட்டு படும் அவஸ்தை அவருக்குதான் தெரியும். போதாமைக்கு உங்களை போன்றவர்கள் ஒரு கேள்வீ தயாராக வைத்து இருக்கின்றார்க்ள் " ஏன் இங்க இருந்து புலி புலி எண்ட்டுறியள் அங்க போய் போராட வேண்டியது தானே" இப்ப்டி கேட்டா அவர் (உன்கள் ந்ண்பனைப்போன்றவர்கல்) என்ன சொல்லுவார். அவர் சொல்லுவார் " ஓம் நான் அங்க இந்த வயதில இருந்தி இருந்தா போராடி இருப்பன்" என்று சொல்லுவார். தப்பு உங்கள் கேள்வியில் தான் உள்ளது உங்கள் நண்பனின் பதிலில் அல்ல.
நீங்களும் ஒரு தமிழன் உங்கள் நண்பனும் ஒரு தமிழன். உங்கள் நண்பன் பல உயிர்களை காப்பாற்றுகின்றார். நீங்கள் வெட்டி பேச்சு பேசியே காலத்தை விரயம் செய்யாதீர்கள்.
உண்மையான மனிதம், அறிவுடையவராய் நீங்கள் இருந்திருந்தால் உங்கள் நண்பரின் பிளையினை அவரிடம் சுட்டிக்காட்டி அவருக்கும் ஏனய தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து ஈழ தமிழர்களின் இருளை களைந்து தாயகதில் உள்ள எங்கள் உறவுகளுக்கு ஒளியாக இருந்திருக்க மாட்டீர்களா.
எனவே உங்கள் நண்பன் என்று சொல்லி அவரை இகழ்ந்து விட்டீர்களே. புகட்சிக்காகவோ இகட்சிக்காகவோ இல்லை வீழ்சிக்காகவோ நாங்கள் வாழ்ந்துவிடகூடாது. தமிழ்ர்களின் மீட்சிக்காக கொடுங்கள் உங்கள் கரங்களை பற்றிக்கொள்கின்றோம் உங்கள் நண்பனும் நானுமாக. வேண்டவே வேண்டாம் (தமிழரிடயே) நம்மிடையே பிரிவு.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு
குரல் தரவல்ல அதிகாரிகள்//////////////
அன்பு வணக்கங்கள் பிபிசி அண்ணன் அவர்களே!
உங்களின் இப்படியான கருத்து சிலரை பண்படுத்தியும் சிலரை புண்படுத்தியும் இருக்கலாம். நான் புண் பட்டவர்கள் சார்பாகவே எனது கருத்தினை முன் வைதிட எண்ணியுள்ளேன். நீங்கள் எந்த தளத்தில் இருந்து உங்கள் கருத்தை முன் வைதீர்களோ எனக்கு தெரியாது. இருந்த போதிலும் உங்கள் கருத்திற்கு எனது கருத்தினை முன் வைக்க விரும்புகின்றேன்.
நீங்கள் கூறியது போலவே உங்கள் நண்பன் முன்பு தமிழீழத்தில் இருந்தபொழுது அவர் விடுதலையின் பால் பற்று இல்லாதவராகவும் தற்பொழுது வெளிநாட்டிற்கு வந்த பின் அவர் (உங்களின் நண்பன்) புலம்பெயர் நாடொன்றில் அவரின் புகழ்சிக்காக தன்னை ஒரு விடுதலைப் புலி ஆதரவாளன் போல அவர் காட்டிட முனைகின்றார் என்றும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.
ஒன்றை நீங்கள் கவனதில் கொள்ளுங்கள், ஒரு நாட்டில் எல்லா மக்களும் விளிப்புணர்வோடு இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூகத்தில் வெவ்வேறு துறையில் சிறப்புடயவனாக விளங்குகின்றான். எனவே இவர்களின் அனைத்து திறன்களையும் ஒன்றுபடுத்தி செயற்படுவதனால் தான் அந்த சமூகம் சிறக்க முடிகின்றது. அன்று உங்கள் நண்பன் சிந்திக்காத ஒன்றை அவர் இன்று சிந்திக்கின்றார் என்பதனை இட்டு நீங்கள் மகிழ்ந்தல்லவா இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து அவரிடம் குறைகாண முற்படாதீர்கள். இன்று நீன்கள் முன்வந்து செய்ய முடியாத ஒன்றை அவர் செய்கின்றாரே அதை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
கால் கை விறைக்க குளிரில் நடந்து சேவை செய்த பின் உங்களை போன்றவர்களின் சொல்லடிகளுக்குள் அகப்பட்டு படும் அவஸ்தை அவருக்குதான் தெரியும். போதாமைக்கு உங்களை போன்றவர்கள் ஒரு கேள்வீ தயாராக வைத்து இருக்கின்றார்க்ள் " ஏன் இங்க இருந்து புலி புலி எண்ட்டுறியள் அங்க போய் போராட வேண்டியது தானே" இப்ப்டி கேட்டா அவர் (உன்கள் ந்ண்பனைப்போன்றவர்கல்) என்ன சொல்லுவார். அவர் சொல்லுவார் " ஓம் நான் அங்க இந்த வயதில இருந்தி இருந்தா போராடி இருப்பன்" என்று சொல்லுவார். தப்பு உங்கள் கேள்வியில் தான் உள்ளது உங்கள் நண்பனின் பதிலில் அல்ல.
நீங்களும் ஒரு தமிழன் உங்கள் நண்பனும் ஒரு தமிழன். உங்கள் நண்பன் பல உயிர்களை காப்பாற்றுகின்றார். நீங்கள் வெட்டி பேச்சு பேசியே காலத்தை விரயம் செய்யாதீர்கள்.
உண்மையான மனிதம், அறிவுடையவராய் நீங்கள் இருந்திருந்தால் உங்கள் நண்பரின் பிளையினை அவரிடம் சுட்டிக்காட்டி அவருக்கும் ஏனய தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து ஈழ தமிழர்களின் இருளை களைந்து தாயகதில் உள்ள எங்கள் உறவுகளுக்கு ஒளியாக இருந்திருக்க மாட்டீர்களா.
எனவே உங்கள் நண்பன் என்று சொல்லி அவரை இகழ்ந்து விட்டீர்களே. புகட்சிக்காகவோ இகட்சிக்காகவோ இல்லை வீழ்சிக்காகவோ நாங்கள் வாழ்ந்துவிடகூடாது. தமிழ்ர்களின் மீட்சிக்காக கொடுங்கள் உங்கள் கரங்களை பற்றிக்கொள்கின்றோம் உங்கள் நண்பனும் நானுமாக. வேண்டவே வேண்டாம் (தமிழரிடயே) நம்மிடையே பிரிவு.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு

