Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜே.வி.பி. சமாதானத்திற்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டுள்ளது - க
#3
<b>இலங்கை: நிதியளிக்கும் நாடுகள் ஜேவிபிக்கு கண்டனம்</b>

விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையைக் சீர்குலைக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சி முயற்சிக்கிறது என ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு புலிகள் விதித்த சில நிபந்தனைகளை ஜே.வி.பி. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் கட்சியின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ள அதிபர் சந்திரிகாவும் அந்தக் கட்சியின் நிபந்தனைகளுக்கு தலையாட்டி வருகிறார்.

இந் நிலையில் அமைதி முயற்சியைக் குலைக்கும் ஜே.வி.பியின் செயல்களை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக இலங்கை புனரமைப்புக்கு நிதியளிக்கும் நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண சந்திரிகா குமாரதுங்கா விரும்பினால் ஜேவிபி கட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நாடுகள் நிபந்தனை விதித்துள்ளன.

இலங்கையில் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தையில் புலிகள் பக்கமிருக்கும் நியாயத்தை சர்வதேச நாடுகள் உணர்ந்துள்ளன என்று மாவீரர் தினத்தன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 12-16-2004, 05:38 AM
[No subject] - by kuruvikal - 12-16-2004, 01:52 PM
[No subject] - by Mathan - 12-16-2004, 04:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)