12-15-2004, 10:17 PM
எங்களுக்கு யாழ்ப்பாணத் தரைத்தோற்றம் பற்றிப் படிக்கக் கிடைக்கவில்லை... நாங்கள் சிந்திப்பதில் இருந்து நிலத்துக்கடியில் தேங்கும் மழை நீர்த்தேக்கங்களில் இருந்து கூடிய அளவு நிலத்தடி நன்னீர் கிடைப்பதாகவே கொள்ள வேண்டும்...இப்போ கழிகமுகங்கள் அல்லது நன்னீரோட்டம் உள்ள சமுத்திர ஓட்டங்கள் இருப்பின் பாறைப்பிளவுகள் ஊடு உட்புகும் நன்னீர் உவர்ப்புப் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு... ஆனால் நிலத்தடி மழை நீர்த் தேங்கு நிலைகளில் உள்ள குறிப்பிட்ட அளவு நீரை சேகரிக்கப்படும் வேகத்தை விட அதிக அளவில் வெளியில் எடுத்தால் அவ் நீர்நிலைகள் வற்ற நிலத்தின் இரசாயன நிலமை மாறி அந்நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு உகந்ததல்லாததாக மாறலாம்... யாழ்ப்பாண நிலம் படிவுவீழ்த்தப்பட்ட பாறைகளை (sedimentary rocks) கொண்டது...அதில் நீரில் கரையக் கூடிய வன்னீர் மென்னீருக்கான இரசாயனக் கூறுகள் இருக்க வாய்ப்புண்டு... அவை நீரில் செறிவாக்கம் அடைவதன் காரணமாக (இப்போ உப்பளங்களில் நிகழ்த்தபப்டும் பொறிமுதைக்கமைய ) உவர்த்தன்மை அடைவதற்கும் சாத்தியம் உண்டு....! எனவே நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்பது யாழில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்..இன்றேல் கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்று இந்த தொழிற்சாலைகளை அமைக்கலாம்..ஆனால் உற்பத்திச் செலவு கண்டியில் ஆற்று நீரைப் பெற்று போத்தல்களில் அடைப்பதை விட அதிகமாக இருக்கும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

