Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உரிந்துபோன உரிமைகள் !! -- தொ. சூசைமிக்கேல்
#1
[size=16]உரிந்துபோன உரிமைகள் !!

-- தொ. சூசைமிக்கேல்
<img src='http://www.c-r.org/accord/sri/accord4/images/refugees.gif' border='0' alt='user posted image'>
[size=14]
மானிடனாய் வாழுதற்கு ஞாலமதில் உரிமை!
மறத்தமிழன் ஆளுதற்கு ஈழமதில் உரிமை!
ஊனுயிரைப் பேணுதற்கு யாவருக்கும் உரிமை
உள்ளதடா, செந்தமிழா! உணர்வாய், உன் உரிமை!

ஊனென்றும் உயிரென்றும் உள்ளது நம் மண்ணே!
உலகிலெவன் அதைப்பறிக்க வருவான், நம் முன்னே?
ஏனென்று கேட்காமல் இருப்பவனோ கோழை:
ஈழமதன் உரிமைக்காய் ஏந்திடடா, வாளை!

உரித்தான பொருட்களுக்கே உரிமையெனும் நாமம்:
உரிந்துவிட்டால் மானமிகு மனிதனுக்கோ நாணம்!
மரித்தாலும் மறித்தாலும் உரிமைகளின் நியாயம்
மறுபடியும் மறுபடியும் மலையளவு பாயும்!...

தங்கையரும் தமக்கையரும் தந்தையரும் தாயும்
தன்னிறைவாய் நடம்புரிந்த நாடெங்கள் உரிமை!
பொங்கிவரும் யாழ்நாடன் புலம்பெயராப் பாணன்
போற்றிவந்த பொன்ஈழ நாடெங்கள் உரிமை!

எனதுநிலம் எனதில்லம் எனக்கில்லை என்றால்
என்னபொருள் காண்பாய், ஏ! "உரிமை" எனும் சொல்லே!
கனல்விழியின் அனல்வழியே காட்சிதரும் ஈழம்
கண்டெடுக்கும் நாள்வரைக்கும் "உரிமை" வெறுஞ் சொல்லே!!...

உரிந்துபோன உரிமைகளே, உயிர்த்தெழுங்கள் மீண்டும்!
உதிராத மலர்க்கொத்தாய் உலவுங்கள் யாண்டும்!
எரிந்தபடி யாம்புரியும் உரிமைகளின் வேள்வி,
எத்தனைநாள் என்பதுதான் ஈழமகன் கேள்வி!

முந்தைய கவிதை
என்ன செய்யும் ?...
Reply


Messages In This Thread
உரிந்துபோன உரிமைகள் !! -- தொ. சூசைமிக்கேல் - by hari - 12-07-2004, 04:05 PM
[No subject] - by tamilini - 12-07-2004, 04:25 PM
[No subject] - by KULAKADDAN - 12-07-2004, 08:02 PM
[No subject] - by kavithan - 12-07-2004, 10:37 PM
[No subject] - by hari - 12-08-2004, 05:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)