12-04-2004, 01:35 PM
kuruvikal Wrote:ratha Wrote:அழுத்தங்களுக்கு அடிபணிவதென்பதல்ல அதன் அர்த்தம். உரிமைப்போராட்ட வடிவங்களின்ஒரு வடிவம்தான்.kuruvikal Wrote:[quote=sayanthan]பணிந்த போக இது பலஸ்தீனம் அல்ல
குனிந்து நின்று பாிசு வாங்க நம் தலைவன்
யசீா் அரபாத் இல்லை
என்றவாறு அது போகும்!
அப்ப தீர்வு....????!
சிறீலங்காவால் அமெரிக்காவுக்கு கடலும் வானும் குத்தகைக்கு விட்டாச்சு... திருமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு குத்தக்கைக்குப் போயாச்சு...அதைப் பாதுகாக்க இந்தியப் படைக்கு அதிகாரம் கொடுத்தாச்சு... இப்போ பத்தாக் குறைக்கு இந்தியா பாகிஸ்தான் சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து....யாழ்ப்பாணம் பிடிக்கப் போகேக்க படையினர் யாழ்ப்பாண நகரை விட்டு ஓடிய பின்னரும் ஏன் அதைப் பிடிக்காமல் புலிகள் யுத்தத்தை ஓய்வுக்கு கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது... இது பற்றி அன்ரனே சொல்லி இருக்கிறார்... இந்தியப் படைக்குவிப்பும் அமெரிக்க ஊடுருவலுக்கான சந்தர்ப்பமும் பிராந்திய சர்வதேச அழுத்தங்களும்... என்று...அப்போ எதிர்காலத்தில் எப்படி இந்த அழுத்தங்களில் இருந்து விடுபடுவது...????! பலஸ்தீனச் சிக்கலை விட சிக்கலானது போல இருக்கு எங்கள் சிக்கல்.....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தனியரசு தான் நிறைவுத் தீர்வு.
இப்படியே அழுத்தங்களுக்கு ஏற்ப வடிவங்களை மாற்றிக் கொண்டிருந்தா எப்போ உலக அங்கீகாரத்தோட தனியரசை அமைப்பது... அதை தேசிய தலைவரின் காலத்துள் செய்ய வேண்டும் இன்றேல் பலஸ்தீனத்தைவிட மோசமாகும் எம் நிலை...!
அதற்கு மக்கள் தங்களை முழுப் போராட்ட சக்தியாக மாற்ற வேண்டும்... உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் தாயகம் வேண்ட காட்டமான குரல் வழங்குவதோடு பங்களிப்பும் செய்ய வேண்டும்...
Quote:<b>இந்திய இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக புலம்பெயர்ந்த மக்கள் பொங்கி எழவேண்டும்.</b>
பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு மற்றும் மாவீரர் தினம் ஆகிய தமிழீழத் தேசிய நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் காண்பித்த எழுச்சியைக் காட்டி இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ள உத்தேசித்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிலுள்ள ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் அத்தனை ஈழத் தமிழர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது -
'தமிழ் மக்கள் எல்லா நாடுகளிலும் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் ஆகியவற்றை நடத்தி இலங்கையுடன் செய்துகொள்ள உத்தேசித்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்தக்கோரி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களில் மகஜர்களைக கையளித்து தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்த விடயத்தில் உள்ள காத்திரத்தை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டு சமாதானம் என்ற பெயரில் இலங்கை அரசு போடும் இரட்டை வேடத்தையும் தெரிந்து கொள்ளும். வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யும் இந்த பேரணிகளுக்கு அங்குள்ள இந்திய நிறுவனங்கள் கடைகள் அரசு சாரா அமைப்புக்கள் கழகங்கள் இந்தியாவின் பல்வேறு சமூகங்கள் ஆகியவற்றிடமிருந்தும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளலாம்.
'இதேவேளை தென்னிந்தியத் திரைப்படத் துறையினரிடமும் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கோரவேண்டும். தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு வெளிநாடுகளிலுள்ள ஈழத் தமிழர்களால் பலகோடி ரூபா பணம் பெரும் லாபமாக் கிடைக்கிறது என்றால் மிகையில்லை. அதாவது அவர்களது ஊதியத்துக்கு ஈழத் தமிழர்களது பங்கு மிகப்பெரியது. ஆகவே ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனஅழிப்பு நடவடிக்கைக்கான உதவியை இந்திய அரசு மேற்கொள்ள அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
'பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்ட தமது நாட்டுப் படையினருக்கு உதவி செய்ய காலை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்துக்கொடுத்த தென்னிந்தியத் திரையுலகம் தமது அரசின் நடவடிக்கையால் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்கள் பாதிக்கப்படும் இந்த இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தமது நியாயமான கரிசனையைக் காண்பிக்க வேண்டும். நேரடியாக அல்லது தமிழ்நாடு அரசின் ஊடாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
'மக்கள் சக்தியால் மட்டுமே இந்த முற்தடுப்பு நடவடிக்கையை செம்மையாக செய்துமுடிக்கலாம்."
-- புதினம் --
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 