11-19-2004, 10:29 PM
Quote:வல்வெட்டித்துறையில் இரு இளைஞர் கொலை, நகரில் பெரும் பதட்டம்நன்றி புதினம்
ஜ யாழ் நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2004, 19:26 ஈழம் ஸ
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையி;ல் இன்று மாலை 6.00 மணியளவில் உந்துருளியில் வந்தவர்களால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்னுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லு}ரி மைதானத்தில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது தலைக் கவசம் மற்றும் ஜாக்கட் அணிந்த இருவர் உந்துருளியி;ல் வேகமாக வந்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு ஆதிகோவிலடிப் பக்கமாகத் தப்பியோடித் தலைமறைவாகிவிட்டனர்.
இத்துப்பாக்கிச் சூட்டில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்து 21 வயதுடைய சதாசிவம் குமரன், 21 வயதான இராசேந்திரம் சுரேஸ்குமார் ஆகியோர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இதேவேளை 34 வயதான பொன்னுத்துரை தெய்வேந்திரம் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிதாரிகள் தங்களை அடையாளம் காட்டாதவாறு மழைக் கோட்டு அணிந்திருந்தார்கள் என்றும், தொண்டமானாறு பக்கமாக இருந்து வந்த மேற்படி மோட்டார் சைக்கிள் குறிப்பிட்ட இடத்தில் வேகம் குறைக்கப்பட்ட போது அதில் பின்னாலிருந்தவர் கண்மூடித்தனமான முறையில் துப்பாக்கிப் பிரயோகத்தை செய்ததாக இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து இராணுவமும் பொலிசாரும் வீதித் தடைகளை ஏற்படுத்தி சுற்றி வளைப்பு தேடுதல்களை மேற் கொண்ட போதிலும் எவரும் கைதாகவில்லை.
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் அவரது 50 வது பிறந்த தினத்தை எதிர் வரும் 26ம் திகதி வெகு விமரிசையான முறையில் கொண்டாடுவதற்கு அப் பகுதி மக்கள் தயாராகி வரும் நேரத்தில் இடம் பெற்ற இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறைப் பகுதியில் பெரும் பதட்ட நிலை காணப்படுகின்றது.
யுத்த நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட உடனேயே தென் தமிழீழத்தில் ஸ்திரத் தன்மையைக் குலைப்பதற்காக இலங்கைப் படைகள், புலனாய்வுத்துறையினர், தமிழ்த் துரோகக் கும்பல்கள், முஸ்லீம் குழப்பவாதிகள் என்ற பெரும் கூட்டின் கைங்கரியங்கள் தொடக்கிவிடப்பட்டிருந்தன.பின்னர் இக்கூட்டுடன் சேர்ந்த துரோகி கருணாவின் செயற்பாடுகளும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல், மிரட்டல்கள் என எல்லையற்று சென்று கொண்டிருந்தது. இச்சதிக் கூட்டின் செயல்களில் பாதிக்கப்படாதவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் தென் தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக இவர்களின் செயற்பாடுகல் ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சதிக் கூட்டினால் இதைத் திசை திருப்பும் முயற்சிகள் வடக்கில் சில காலங்களாக தொடங்கி இருப்பதற்கான சம்பவங்கள் நடைபெற்று வந்தன. .... மன்னாரில் விடுதலைப் புலிகளின் அலுவலகம் தீக்கிரை, யாழ் நகரில் இளைஞர்கள் மீதான தாக்குதல்கள், வவுனியாவில் ஆட்கடத்தல்கள், இரானுவ வாகனங்களினால் மோதப்பட்டு கொல்லப்படுவது, ... என்று அதிகரித்துப் போனதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் துரோகிகளினால் நடாத்தப்படும் இணையத்தளமொன்றில் துரோகி கருணாவின் செயற்பாடுகள் வடக்கிலுமென்று செய்தி போடப்பட்டதாவது, இவையெல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் எமது அயல் நாடானது தனது புலனாய்வு எனும் பெயரில் பத்துக் கோடி இந்திய ரூபாக்களை ஈ.பிடி.பி மூலம் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சதிச் செயல்களுக்கு ஒதுக்கியதையும் இக்கூட்டுச் சதியினை வளர்ப்பதின் ஓரங்கமே.
இச்சதிக் கூட்டின் செயல்களின் ஒரங்கமே இன்றைய வல்வெட்டித்துறைப் படுகொலை!
இது வடக்கின் ஏனைய பகுதிகளுக்கும் படரத்தான் போகின்றது. இதைத் தொடர அனுமதிக்க வேண்டுமா? இப்படுகொலையானது வடக்கில் எச்சம் சொச்சமாக எஞ்சியிருக்கும் துரோகக் கும்பல்களைக் கொண்டே நடாத்தப்பட்டிருக்க வேண்டுமென்பது வெளிப்படையான உண்மையாகும். ஏற்கனவே சமூகச் சீர்கேடுகளில் ஈடுபட்டுவந்த இக் கும்பல்கள், இன்று ஒருபடி மேல்நோக்கி சென்றுள்ளன. இவர்களை நீண்ட காலத்துக்கு விட்டு வைத்தால் தேசியத்துக்கே சாவு மணியடிப்பதாக முடிந்துவிடும். சர்வதேச அபிப்பிராயம், ஜனநாயகமரபு எல்லாவற்றையும் ஒரு மூலையில் கட்டி வைத்து விட்டு, எம்மினத்தின் இந் நச்சுக் களைகளை உடணடியாக வேரோடு அகற்றப்பட வேண்டும்.
" "

