Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதியார் கவிதைகள்
#3
கொடி


தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல்வந்தே மாதர மென்றே
பாங்கி னெழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

பட்டுத் துகிலென லாமோ? - அதிற்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்

இந்திரன் வச்சிர மோர்பால் - அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால்
மந்திர நடுவுறத் தோன்றும் - அதை
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர் - தங்கள்
நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.

அணியணி யாயவர் நிற்கும் - −ந்த
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறற்
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர் (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர், (தாயின்)

கன்னட ரொட்டிய ரோடு - போரிற்
காலனு மஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளப்ப - நிற்கும்
பொற்புடை யாரிந்து ஸ்தானத்து மல்லர்,

பூதல முற்றிடும் வரையும் - அறப்
பேர்விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்,

பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினுந் தாயின் - பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்,

சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்!
Reply


Messages In This Thread
[No subject] - by தமிழன் - 07-28-2003, 06:19 PM
[No subject] - by தமிழன் - 07-28-2003, 07:30 PM
[No subject] - by sethu - 08-17-2003, 08:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)