11-18-2004, 01:29 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/மாவீரர்.jpg' border='0' alt='user posted image'>
பருவ வயதில்
மீசை அரும்பும் காலத்தில்
குளப்படி மறந்தாய்
குறும்புகள் துறந்தாய்
கூடிக் குலாவும் கொள்கை மறந்தாய்
தாய் மண் விட்டோடி
அடைக்கலம் தேட மறந்தாய்
அகதியாகி பீ ஆர் வாங்கி
அழகான பெண்ணெடுக்க மறந்தாய்
காரும் வீடும்
வேண்டாத சகவாசமும்
களிம்பும் கழுத்தோடு சைக்கிள் செயினும்
பியரும் கானும்
பப்பும் பீசாவும்
இவை அனைத்தும் மறந்தாய்
நீ அறிந்ததெல்லாம்
தலைவன் மொழியும்
தாயக விடுதலையும்
விடுதலையின் தேவையும் தர்மமும்...!
அந்த வயதில் இவ்வளவும்
விளங்குமா... சாத்தியமா...
வினவுகின்றார் சிலர்
அவருக்கு சாட்சியாயும் நீயே....!
நிச்சயம்...
தலைவன் பாசறையில்
பறவைக்கும் புரியும்
தாய் மண்ணின்
விடுதலையின் பெறுமதி....!
பார்....
நீ பயிற்சிக்காய் ஏகையில்
கத்தித் திரிந்த கூடித் திரிந்த
வரப்போரக் கரிக்குருவி
இத்தனை கொடூரங்கள் கண்டும்
அண்டை நாட்டிலா தங்சமடைந்தது..???!
அழிந்த கூடுகள் செம்மையாக்கி
சீராக வாழவில்லை...!!!!!
அதுக்கு ஆசை
நீ மிதித்த மண்ணோடு உறவாட....
ஐந்தறிவென்றாலும்
நன்றி இருக்கு
தனக்காய் வாழ்ந்தவனுக்காய்
தான் வாழ....!
மண்ணிற்காய் மக்களுக்காய்
எத்தனை மருத்துவர்கள்
எத்தனை இஞ்சினியர்கள்
எத்தனை எக்கவுண்டன்கள்
கையில் பட்டமில்லை
மனதோடு கனவுகள் சுமந்து....
தாய் மண் மானம் காக்க
களத்தோடு கருவி எடுத்து
ஆக்கிரமிப்பின் விளைவறிந்து
வினை அறிந்து
எதிரி தம் பாசறை கலங்கடித்து
கரும்புலியாய் கடற்புலியாய்
தரைப்புலியாய் வான் புலியாய்
வீறுகொண்டு பாய்ந்திருப்பர்....!
அவர்கள் மண்ணின் மைந்தர்கள்
மாவீரரான வீரத்தாய்ப் புதல்வர்கள்...!
வீர வசனம் பேசி
எட்ட நின்று கூத்தடிக்கும் கூட்டமல்ல
களத்தோடு கூடி நின்று
மரணத்தால் கதை எழுதிய
காவியங்கள்...!
உங்கள் இலட்சியம் சுமக்க
தாய் மண் சுமப்பாள்
இன்னும் ஆயிரம் ஆயிரம் வீரர்கள்
உங்களைப் போலவே தீரத்துடன்....!
உங்கள்...
வீர இலட்சியம் நிறைவேறும்
உறங்குங்கள் கண்மணிகளே
நான்....
வீர தாலாட்டுப் பாட வேண்டும்
இன்றேல் நாவொடிந்து
வீழ்ந்திடுவேன்....!
பருவ வயதில்
மீசை அரும்பும் காலத்தில்
குளப்படி மறந்தாய்
குறும்புகள் துறந்தாய்
கூடிக் குலாவும் கொள்கை மறந்தாய்
தாய் மண் விட்டோடி
அடைக்கலம் தேட மறந்தாய்
அகதியாகி பீ ஆர் வாங்கி
அழகான பெண்ணெடுக்க மறந்தாய்
காரும் வீடும்
வேண்டாத சகவாசமும்
களிம்பும் கழுத்தோடு சைக்கிள் செயினும்
பியரும் கானும்
பப்பும் பீசாவும்
இவை அனைத்தும் மறந்தாய்
நீ அறிந்ததெல்லாம்
தலைவன் மொழியும்
தாயக விடுதலையும்
விடுதலையின் தேவையும் தர்மமும்...!
அந்த வயதில் இவ்வளவும்
விளங்குமா... சாத்தியமா...
வினவுகின்றார் சிலர்
அவருக்கு சாட்சியாயும் நீயே....!
நிச்சயம்...
தலைவன் பாசறையில்
பறவைக்கும் புரியும்
தாய் மண்ணின்
விடுதலையின் பெறுமதி....!
பார்....
நீ பயிற்சிக்காய் ஏகையில்
கத்தித் திரிந்த கூடித் திரிந்த
வரப்போரக் கரிக்குருவி
இத்தனை கொடூரங்கள் கண்டும்
அண்டை நாட்டிலா தங்சமடைந்தது..???!
அழிந்த கூடுகள் செம்மையாக்கி
சீராக வாழவில்லை...!!!!!
அதுக்கு ஆசை
நீ மிதித்த மண்ணோடு உறவாட....
ஐந்தறிவென்றாலும்
நன்றி இருக்கு
தனக்காய் வாழ்ந்தவனுக்காய்
தான் வாழ....!
மண்ணிற்காய் மக்களுக்காய்
எத்தனை மருத்துவர்கள்
எத்தனை இஞ்சினியர்கள்
எத்தனை எக்கவுண்டன்கள்
கையில் பட்டமில்லை
மனதோடு கனவுகள் சுமந்து....
தாய் மண் மானம் காக்க
களத்தோடு கருவி எடுத்து
ஆக்கிரமிப்பின் விளைவறிந்து
வினை அறிந்து
எதிரி தம் பாசறை கலங்கடித்து
கரும்புலியாய் கடற்புலியாய்
தரைப்புலியாய் வான் புலியாய்
வீறுகொண்டு பாய்ந்திருப்பர்....!
அவர்கள் மண்ணின் மைந்தர்கள்
மாவீரரான வீரத்தாய்ப் புதல்வர்கள்...!
வீர வசனம் பேசி
எட்ட நின்று கூத்தடிக்கும் கூட்டமல்ல
களத்தோடு கூடி நின்று
மரணத்தால் கதை எழுதிய
காவியங்கள்...!
உங்கள் இலட்சியம் சுமக்க
தாய் மண் சுமப்பாள்
இன்னும் ஆயிரம் ஆயிரம் வீரர்கள்
உங்களைப் போலவே தீரத்துடன்....!
உங்கள்...
வீர இலட்சியம் நிறைவேறும்
உறங்குங்கள் கண்மணிகளே
நான்....
வீர தாலாட்டுப் பாட வேண்டும்
இன்றேல் நாவொடிந்து
வீழ்ந்திடுவேன்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

