10-16-2004, 08:46 PM
Quote:வீரகேசரி-
""புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா ஜனநாயக நீரோடைக்கு வந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதை நான் வரவேற்கிறேன். அவரது புதிய கட்சியைப் பதிவுசெய்வதற்கு தேர்தல் ஆணையாளர் செயற்படுவார் என நான் நம்புகிறேன்'' என கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை கூட்டமுடிவுகளை அறிவிக்கவென நேற்றுக்காலை தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ""கருணா புதிய அரசியல்கட்சி ஒன்றை ஆரம்பிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன'' என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது கடமைகளை தங்குதடையின்றி மேற்கொள்ள அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அனுப்பியவர் வெப்தமிழன் நேரம்: மாலை 6:11:15

