Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதி(க்கதைகள்)
#12
சிங்க ராஜாவுக்கு வயசாகிவிட்டது. முன்போல இரை தேடி வேட்டையாட முடியவில்லை. அதனால் அது ஒரு தந்திரம் செய்தது.

'ராஜாவுக்கு உடல் நலம் சரியில்லை. எல்லாரும் போய் நலம் விசாரியுங்கள்' என்ற செய்தியைக் காட்டில் பரப்பியது. குகைக்குள் போய் படுத்துக்கொண்டது. காட்டு மிருகங்கள் ஒவ்வொன்றாக குகைக்குள் வந்து நலம் விசாரித்தன. சிங்கம் அவைகளை பரிவுடன் கிட்டே வரச் சொல்லி, கட்டிப்பிடித்து சற்றும் எதிர்பாராத சமயத்தில் அடித்து சாப்பிட்டது.

நரி மட்டும் உள்ளே வரவில்லை. குகை வாயிலிலிருந்து சத்தமாக ''அரசே! உங்கள் உடல் நலம்¢ சரியில்லையென்றார்கள். இப்போது எப்படி இருக்கிறது? டாக்டரிடம் காட்டினீர்களா?''

சிங்க ராஜா, ''ஏதோ சௌக்கியம்! வயசாகிவிட்டதல்லவா! ஆமாம், ஏன் வாசலிலேயே நிற்கிறாய்? உள்ளே வாயேன்''என்றது.

நரி, ''அரசே, இங்கேதான் பத்திரம். வெளியிலிருந்தே விசாரிக்கிறேன்''¢ என்றது.

''ஏன்?''

''பல மிருகங்கள் குகைக்கு உள்ளே செல்லும் காலடிகள்தான் தெரிகின்றன. வெளியேவரும் காலடிகளைக் காணவில்லை'' என்று சொன்னது.

நீதி : முதலில் உயிர். அப்புறம்தான் துக்கம் விசாரிப்பது எல்லாம்.

நன்றி அம்பலம்
[i][b]
!
Reply


Messages In This Thread
பாவனை - by சாமி - 11-11-2003, 09:26 PM
மனமாற்றம் - by சாமி - 11-11-2003, 09:28 PM
[No subject] - by veera - 11-26-2003, 01:00 PM
[No subject] - by Thiyaham - 09-09-2004, 04:28 AM
[No subject] - by சாமி - 09-12-2004, 11:18 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:05 PM
பத்திரம் - by சாமி - 10-06-2004, 11:14 PM
[No subject] - by tamilini - 10-06-2004, 11:20 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:20 PM
வாபஸ் - by சாமி - 10-23-2004, 11:34 PM
[No subject] - by Sriramanan - 10-24-2004, 03:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)