10-06-2004, 10:53 PM
கடலோர ஆமை, விண்ணில் திரியும் பறவைகளைப் பார்த்து பெருமூச்சுவிட்டது.
''யாரும் எனக்குப் பறக்க கற்றுத் தரமாட்டீர்களா?'' என்றது.
அவ்வழியே பறந்து சென்ற பருந்து 'கற்றுத் தந்தால் என்ன தருவாய்?' என்றது.
ஆமை, ''கடல்¢ செல்வங்கள் அனைத்தையும் தருவேன்'' என்றது.
பருந்து, கிருஷ்ணப் பருந்து. வலுவான கால்கள். ஆமையைத் தூக்கிக்கொண்டு மேலே மேலே சென்று, மேகத்தின் அருகில் அதை விடுவித்து ''பற! இப்படித்தான் என் குஞ்சுக்கு சொல்லிக் கொடுப்பேன்'' என்றது.
ஆமை நேராக விழுந்து, ஓடு உடைந்து சிதறியது.
''பூமியில் வேகமாக நடக்கவே பழகாதவன், பறக்க விரும்பினேன் பாரு! எனக்கு நன்றாக வேண்டும்'' என்று பிராணனை விட்டது.
நீதி: பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக்கொள்.
நன்றி அம்பலம்
''யாரும் எனக்குப் பறக்க கற்றுத் தரமாட்டீர்களா?'' என்றது.
அவ்வழியே பறந்து சென்ற பருந்து 'கற்றுத் தந்தால் என்ன தருவாய்?' என்றது.
ஆமை, ''கடல்¢ செல்வங்கள் அனைத்தையும் தருவேன்'' என்றது.
பருந்து, கிருஷ்ணப் பருந்து. வலுவான கால்கள். ஆமையைத் தூக்கிக்கொண்டு மேலே மேலே சென்று, மேகத்தின் அருகில் அதை விடுவித்து ''பற! இப்படித்தான் என் குஞ்சுக்கு சொல்லிக் கொடுப்பேன்'' என்றது.
ஆமை நேராக விழுந்து, ஓடு உடைந்து சிதறியது.
''பூமியில் வேகமாக நடக்கவே பழகாதவன், பறக்க விரும்பினேன் பாரு! எனக்கு நன்றாக வேண்டும்'' என்று பிராணனை விட்டது.
நீதி: பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக்கொள்.
நன்றி அம்பலம்
[i][b]
!
!

