10-03-2004, 06:18 AM
Quote:அவர்களை உழைக்க வந்தீர்கள் உழைத்துவிட்டீர்கள் தானே திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ சண்டையென்று வந்தீர்கள் சண்டை முடிந்துவிட்டது திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.நான் வருமானத்தில் பாதியை வரியாக செலுத்துகிறேன். எனது வரிப்பணம் போலி அகதிகளுக்கு போகாமல், போர்களங்களில் வாழும் உண்மையான அகதிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்த எனக்கு புூரணமான உரிமை இருக்கிறது.
Quote:சண்டை முடிந்துவிட்டதாக உங்களைப் போன்ற புத்திஜீவிகள் நீங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் உங்கள் சொகுசான வாழ்வு இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே சண்டை முடிந்தாலும் அது தொடருகிறது என்று சொல்லுவீர்கள். சண்டை தொடரும் நாட்டில் எந்த நிறுவனம் அல்லது நாடு பணத்தை முதலீடு செய்து அதை அபிவிருத்தி செய்ய முடியும்? விடுதலைப்புலிகளோ வாருங்கள் வாருங்கள் வன்னியில் முதலிடுங்கள் என்கிறார்கள். நீங்களோ சண்டை முடியவில்லை, நாங்களை போகமுடியவில்லை என்கிறீர்கள்.
Quote:\"தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்\"அதற்குழ் மேற்கண்ட வரிகளில் பம்மாத்து வேறு. (நான் அண்மையில் போய் வந்தவன். வந்து வேறு சிலரும் போய் பயனுள்ள செயற்திட்டங்களை செய்ய ஏற்பாடும் செய்தவன். அதே வேளை இப்படி போலி அகதிகள் போராட்டத்தை விற்று வாழ்ந்து பின் போடும் புழுகு கையெழுத்து வரிகளையும் நிறையவே கண்டிருக்கிறேன்.)
''
'' [.423]
'' [.423]

