10-02-2004, 01:18 PM
படிப்பென்பதற்கு முன்னர் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பாடசாலையை இடையில் விட்டு படிக்காத ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள். ஆக எல்லாரும் படித்து விடலாம் என்று கருத வேண்டாம். அடுத்தது இது அவர்கள் சென்றடைந்த நாடுகளையும் பொறுத்தது. நீங்கள் என்னதான் படித்துக் கிழித்தாலும் அவை தங்களுடைய சட்ட விதிகளின் பிரகாரம் தான் குடியுரிமை தருகின்றன. எல்லா நாடுகளுமே கனடா போலவும் அவுஸ்ரேலியா போலவும் குடியுரிமைகளை தூக்கி தந்து விடுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் ஒட்டுண்ணிகள் போல வாழ்கின்றார்கள் என்ற கருத்து எதனை சொல்ல வருகிறது. கடந்த விடுமுறையில் நான் சுவிஸ் போயிருந்தேன். கணவனும் மனைவியுமாக எத்தனை கஸ்ரப்படுகிறார்கள் தெரியுமா? காலையும் மாலையும் அவர்கள் கஸ்ரப் படுவது நீங்கள் என்ன நோக்கத்திற்காக சென்றீர்களோ அதற்காகவே. பணம் சம்பாதிக்கவே, நல்ல வாழ்க்கை தரத்திற்கா கவே. கனடா போல அவுஸ்ரேலியா போல அந்த நாடுகளும் 1 வருடத்திலோ அல்லது 2 வருடத்திலோ குடியுரிமை கொடுத்தால் அவர்களும் இன்று அந்த நாட்டு பிரஜைகள் தான். எரிபொருள் நிலையத்தில் வேலை செய்து எல்லோராலும் படிக்க முடியாது. அவர்கள் கடன் பட்டு வந்த தொகை ஊரில் வட்டியும் குட்டியுமாக வளர்ந்திருக்கும். அக்காவோ தங்கையோ திருமணத்திற்காக காத்திருப்பாள். இந்த லட்சனத்தில் சொந்தமாக தொழில் தொடங்குவதையும் படித்து முடிப்பதையும் எப்படி நினைத்துப் பார்க்க முடியும். 1997 வரை வன்னியில் இருந்தவன் நான். வன்னி ஒரு சோமாலியாவாக றுவாண்டாவாக மாறாமல் அங்கிருந்தவர்கள் ஒரு வேளை கஞ்சியாவது குடித்தார்கள் என்றால் அதற்கு காரணம் யார் என்று உங்களுக்கு தெரியும். இறுதியாக ஒரு விடயம். நான் இங்கே அகதியாக வரவில்லை. கேஸ் அது இது எதுவுமில்லாமல் இயல்பாக விசா எடுத்து வந்தவன். ஆனால் நான் இப்படி வந்ததற்கு நீங்கள் சொன்னது போல வணிகம் எதுவும் தொடங்காமல் படிக்காமல் உங்களது வார்த்தைகளில் ஒட்டுண்ணியாய் வாழ்ந்த என் தந்தை தான் காரணம். நியாயமாய்ப் பார்த்தால் வெளிநாடுகளில் பெரும்பாலானாவர்கள் புரிகின்ற தொழிலை இலங்கையில் செய்து அவர்களால் வருமானம் ஈட்ட முடியாது. அவர்கள் அங்கேயே இருக்கட்டும். ஆனால் நானும் நீங்களும் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் இலங்கையில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. நல்ல சம்பளமும் கிடைக்கிறது. குடியுரிமையை உதறி எறிந்து விட்டு வாருங்கள். நானும் வருகிறேன். என்ன இருந்தாலும் அது நம் அன்னை மண்ணல்லவா?
..

