Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேவைதானா?
#5
சுவிஸில் இலங்கைத் தமிழர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலி

சுவிற்சர்லாந்து நாட்டில் லங்சான் என்ற நகரத்தில் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது:-

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கடந்த திங்கள் இரவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி தொலைபேசி அழைப்பின் மூலம் பொலிசுக்கு முறையிட்டு பொலிஸாரை வரவழைத்துள்ளார்.

பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்ததும் கணவன் சமையலறைக்குள் சென்று கத்தியை எடுத்துச் சென்று பொலிஸாரைக் குத்தியுள்ளார். இதில் ஒரு பொலிஸ்காரர் காயமடைந்தார். அடுத்த பொலிஸாரை நோக்கி கத்தியுடன் செல்கையில் அந்தப் பொலிஸ்காரர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார்.

இறந்தவர் 8 வயது, 6 வயது, 4 மாதக் குழந்தைகளின் தந்தையாவார். அவரது மனைவி 25 வயதுடைய இளம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Reply


Messages In This Thread
தேவைதானா? - by ganesh - 09-17-2004, 11:21 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 11:28 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 11:32 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 11:35 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 11:37 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 11:55 PM
[No subject] - by kuruvikal - 09-18-2004, 02:06 AM
[No subject] - by ganesh - 09-18-2004, 08:54 AM
[No subject] - by tamilini - 09-18-2004, 01:34 PM
[No subject] - by ganesh - 09-18-2004, 01:48 PM
[No subject] - by ganesh - 09-18-2004, 01:51 PM
[No subject] - by ganesh - 09-19-2004, 09:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)