09-17-2004, 01:22 PM
இதையும் பாருங்க...
<b>சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முயன்ற 31 பேர் கைது </b>
சட்டவிரோதமாக விமானம் மூலம் இங்கிலாந்து செல்லமுயன்ற 31 பேரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டோரில் 26 பேர் தமிழ் இளைஞர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலைதீவுக்குச் செல்வதாக தெரிவித்து இவர்கள் இங்கிலாந்துக்கு செல்ல முயற்சித்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து போலி விமானப் பயணச் சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இங்கிலாந்து செல்வதற்கான விசா அனுமதி இவர்களிடம் இருந்த போதிலும் அதற்கான விமானப் பயணச்சீட்டு போலி என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
puthinam.com
<b>சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முயன்ற 31 பேர் கைது </b>
சட்டவிரோதமாக விமானம் மூலம் இங்கிலாந்து செல்லமுயன்ற 31 பேரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டோரில் 26 பேர் தமிழ் இளைஞர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலைதீவுக்குச் செல்வதாக தெரிவித்து இவர்கள் இங்கிலாந்துக்கு செல்ல முயற்சித்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து போலி விமானப் பயணச் சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இங்கிலாந்து செல்வதற்கான விசா அனுமதி இவர்களிடம் இருந்த போதிலும் அதற்கான விமானப் பயணச்சீட்டு போலி என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

