Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீயா பேசியது?
#1
[size=24]<b>
நீயா பேசியது?</b>


<img src='http://www.yarl.com/forum/files/vennila_1_.jpg' border='0' alt='user posted image'>

<b>என் உள்ளத்தில் புகுந்து
உன் உருவத்தை இழைக்க வைத்து
என் கனவுகளையும்
இனிமையாக்கிய என் இனியவனே!
நீயா பேசியது
அந்தக் கொடிய வார்த்தையை

சோகத்திலும் உனது
சொர்க்கவைக்கும் வார்த்தைகளை
நினைத்த எனக்கு இன்று
தீயால் செய்த பூவைத்
தூவி நோயால் என்னை
வாட வைத்து பேயாய்
நடந்து கொண்டாயே

உன் பேச்சில் நான்
வார்த்தையாய் இருக்க
நினைத்தேன் - ஆனால்
நீயோ வார்த்தையைப்
பிழையாகப் பேசிவிட்டாயே!

என் இதயத்தில் இருண்டு
கிடந்த மேகத்தை - உன்
மின்னல் பார்வையால்
மழையாய்ப் பொழிய வைத்து
என்னை நீல வானம்
ஆக்கியவனே
நீயா பேசியது?

இரக்கமில்லாதவளே!
உனக்குள் இனியும்
எதற்கு என் ஞாபக உறக்கம்
கலைந்துவிடு உனது
காதல்த் தூக்கத்தை
என்னை மறந்த விடு
வேறு ஆடவனை மணந்து விடு
என்ற பஞ்சமில்லாத பொல்லாத
பொய்யான வார்த்தையை
நீயா பேசியது?</b>
----------
Reply


Messages In This Thread
நீயா பேசியது? - by வெண்ணிலா - 09-07-2004, 11:43 AM
[No subject] - by tamilini - 09-07-2004, 12:20 PM
[No subject] - by வெண்ணிலா - 09-07-2004, 12:30 PM
[No subject] - by tamilini - 09-07-2004, 12:34 PM
[No subject] - by tholar - 09-07-2004, 03:40 PM
[No subject] - by Thiyaham - 09-07-2004, 04:34 PM
[No subject] - by வெண்ணிலா - 09-07-2004, 05:31 PM
[No subject] - by vasanthan - 09-07-2004, 05:33 PM
[No subject] - by tamilini - 09-07-2004, 07:29 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 08:11 PM
[No subject] - by வெண்ணிலா - 09-08-2004, 07:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)