Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....?
#11
அன்றழுத குரல் என் அயல்வீட்டுக் குரலல்லவா....!

'ஐயோ....அம்மா....ஆராவது வாங்கோவன்....."
இன்றும் நினைவகலா அழுகையது.
கோடிசுற்றி ஓடியோடி
கும்பிட்ட தெய்வமேதும் - அவள்
துயரில் குரல்கூட எழுப்பவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாய்
உடல் துளாவி உடற்சட்டை கிழித்து
மரணத்தின் வாசலில் துடிதுடிக்க
மாறிமாறி அவள் உடல் கிழிபட்ட
துயர் சொல்ல எனக்குத் துணிச்சலில்லை.

ஊர் எல்லை வரையிலுமாய் அந்தக்குரல்
இப்பவும் தான் நினைவிருக்கு.
.....! அவள் குரல்தான் அது.
புரிந்திருந்தும் காப்பாற்ற
ஒரு புழுவும் அசையவில்லை.

இருபதுக்கும் மேலானவர்கள்
ஒருத்தியின் உடல் உழுத
உண்மை புரியாது இன்னும்
அவர்களை நேசிக்கும்படியான
வார்த்தைப் பூச்சுக்கள்...
எப்படித்தான் ஜீரணிக்க...!
அன்றழுத குரல் எந்தன்
அயல்வீட்டின் குரலல்லவா....!

மூச்சிழந்து போன பின்னும்
மும்பைக்காரச் சிப்பாயின்
கோரம் அடங்காமல்
மீண்டும்....மீண்டும்....
அடுத்தடுத்துக் கொடியவரின் வெறி
அவள் உடலில்.....

வேலியெங்கும் துப்பாக்கிக் கூலிகளின்
வாயெங்கும் வீணி வடிந்தபடி....
படுகிழவியென்றாலும் பறவாயில்லை
பாவியரின் கண்ணெல்லாம் அதுவாக....
வல்லுறவு கொண்ட துயர்
வடிக்கவா முடியும் வார்த்தைக்குள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 08-27-2004, 12:56 AM
[No subject] - by shanmuhi - 08-27-2004, 08:24 AM
[No subject] - by yarl - 08-27-2004, 10:01 AM
[No subject] - by tamilini - 08-27-2004, 02:24 PM
[No subject] - by shanthy - 08-27-2004, 11:16 PM
[No subject] - by shanthy - 08-27-2004, 11:39 PM
[No subject] - by kavithan - 08-27-2004, 11:51 PM
[No subject] - by kavithan - 08-27-2004, 11:55 PM
[No subject] - by tamilini - 08-28-2004, 10:45 AM
[No subject] - by shanthy - 08-30-2004, 12:00 PM
[No subject] - by kuruvikal - 08-30-2004, 01:18 PM
[No subject] - by tamilini - 08-30-2004, 01:34 PM
[No subject] - by tamilini - 08-30-2004, 01:36 PM
[No subject] - by சுடரோன் - 09-08-2004, 09:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)