08-29-2004, 12:52 AM
Quote:கடவுளே இல்லை நாமெல்லாம் பெரியார் வம்சங்கள் எனக்கதையளந்து கொண்டு அலுமாரியுக்கை சாமிப்படத்தை மறைச்சு வைச்சும் கும்பிடுவதும் , அக்கினி வளக்கமாட்டோம் , அருந்ததி காட்டமாட்டோம் , தாலியே கட்டமாட்டோம் , தமிழ்முறைத் திருமணமே பித்தலாட்டம் என்று எல்லோரையும் ஏமாற்றி தம்குடும்பம் என்றவுடன் ஐயரை அழைத்து ஓமம் வளர்த்து , தாலிகட்டி , மேளமடிச்சு , பால்பழம் குடுத்த திருமணங்களையும் விட. , ஏமாற்றறுப்புரட்சிவாதிகளை விடவும் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கல்லையும் கும்பிடுபவன் மேலானவன் இளைஞன்
சரியாய் சொன்னீர்கள் சாந்தி அக்கா. அப்படி நடப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டின் கருணாநிதியை எடுத்துக் கொண்டால்.. திராவிட இயக்கம் என்ற பேரால் கட்சி ஆனால் நடப்பது?
ஜெயலலிதாவை கிண்டல் பண்ணுவார்கள் எல்லாவற்றிலும் பச்சை நிறம் வருமாறு பார்க்கிறார் என்று.
கருணாநிதி மட்டும் குறைச்சலா. மஞ்சள் துண்டுடனே வலம் வருகிறார். சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் அவர் வந்த குதிரை வண்டியின் நிறமும் மஞ்சள் தான். இப்படி பகுத்தறிவு பேசியவர்களே மூடத்தனத்தின் உச்சியில் நிற்கும் போது மற்றவர்களை என்ன சொல்ல?

