08-27-2004, 11:39 PM
நெஞ்சிலின்றும் ரணமாக....
துயர் எங்கள் வீதிகளில் நடந்ததை
து}ரதேசச் சொந்தங்களே
அறியாக் கொடுமையெங்கள்
வீதிகளில்....வீடுகளில்....கோவில்களில்....
ஆழுக்காள் அழுதபடி...
ஊருக்குள் எங்கள் துயர்....
சிங்களத்தான் தந்த கொடும் துயர் ஆற முன்னாலே
இந்தியராய்....எங்கள்....உறவினராய்....
வந்தவரின் வாகனச் சில்லுக்குள்....
ஆட்லறி ஷெல்லுக்குள்....
அடுத்து வந்த இயந்திரத் துப்பாக்கிக்குள்...
அழிபட்ட துயர் சொல்லி ஆறவொரு நாதியின்றி
அழிபட்டோம்....,அடிபட்டோம்...,
உலகறிந்து வரவில்லை - எந்த
உலகநாடும் வாய் திறக்கவில்லை.
நாங்களே செத்தோம்....,
நாங்களே அழுதோம்....,
நாங்களே அழிந்தோம்....,
நமக்குள்ளே துயர்மண்டி
நம் துயர் நமக்குள்ளே புதையுண்டு....
நாங்கள் வாழ்ந்த காலம்
நெஞ்சிலின்றும் ரணமாக....
துயர் எங்கள் வீதிகளில் நடந்ததை
து}ரதேசச் சொந்தங்களே
அறியாக் கொடுமையெங்கள்
வீதிகளில்....வீடுகளில்....கோவில்களில்....
ஆழுக்காள் அழுதபடி...
ஊருக்குள் எங்கள் துயர்....
சிங்களத்தான் தந்த கொடும் துயர் ஆற முன்னாலே
இந்தியராய்....எங்கள்....உறவினராய்....
வந்தவரின் வாகனச் சில்லுக்குள்....
ஆட்லறி ஷெல்லுக்குள்....
அடுத்து வந்த இயந்திரத் துப்பாக்கிக்குள்...
அழிபட்ட துயர் சொல்லி ஆறவொரு நாதியின்றி
அழிபட்டோம்....,அடிபட்டோம்...,
உலகறிந்து வரவில்லை - எந்த
உலகநாடும் வாய் திறக்கவில்லை.
நாங்களே செத்தோம்....,
நாங்களே அழுதோம்....,
நாங்களே அழிந்தோம்....,
நமக்குள்ளே துயர்மண்டி
நம் துயர் நமக்குள்ளே புதையுண்டு....
நாங்கள் வாழ்ந்த காலம்
நெஞ்சிலின்றும் ரணமாக....
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

