07-16-2003, 06:46 PM
வணக்கம் நண்பர்களே...
தமிழ்த் தொலைகஇகாட்சி இணையத்தில் ஞாயிறன்று 17:00 மணிக்கும், திங்களன்று 12:00 மணிக்கு மறு ஓளிபரப்பாகவும்
நிகழ்ந்த நாச்சிமார் கோவிலடி இராஜுன் வில்லிசைக் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி பற்றிய சீறு விமர்சினம் இது.
காசுமரம் என்னும் ஒரு சிறுகதையை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வில்லிசை நிகழ்வு அது. புலம்பெயர்ந்து வாழும்
ஈழத்தமிழ் சமூகத்தின் வாழ்க்கையையும், அதில் பணத்தின் ஆதிக்கமும் பற்றிய ஒரு அற்புதமான சிறுகதையை வில்லிசைக்கு
ஏற்றபடி தொகுத்தமைத்து, இனிமையான மெட்டோடு கவிமொழியில் மொழிந்து, தமிழ் சிந்திப்பதற்கு வழிசமைத்திருந்தார்கள்.
வில்லிசைபற்றி எனக்கொன்றும் பெரிதாகத் தெரியாதுதான். ஆனாலும் சாதாரண பார்வையாளன் என்னும் வகையில்
என்னைப் பாதித்தவற்றை எழுதுகிறேன். அந்நிகழ்வில் நடுநாயகமாக வீற்றிருந்தார் வில்லிசைப் புலவர் திரு இராஜன்
அவர்கள். அவரைச் சுற்றி மொத்தம் ஐந்து(?) கலைஞர்கள். அவர்களில் ஒருவர் திரு இராஜன் அவர்களின் மகன் என்று
எண்ணுகிறேன். ஒளிப்பதிவுக் கருவியும் அடிக்கடி அவரைச் சுற்றி வருவதாலோ என்னவோ அவ் வில்லிசை நிகழ்வில்
திரு இராஜன் அவர்களைத் தவிர மற்றவர் எவரும் எம்மைப் பாதிக்கவில்லை. அதுதவிர மற்றவர்கள் ஏதோ சோர்ந்துபோய்
இருந்தார்கள். சிலவேளைகளில் வில்லிசைக் கதைகேட்டு அந்த இடத்திலேயே நித்திரை கொண்டுவிடுவார்கள் போலவும்
இருந்தது. இடையிடையே அவர்களும் ஏதோ சொன்னார்கள்தான். ஆனாலும் அந்நிகழ்வுக்கு அவை வலுச்சேர்ப்பனவாக
இல்லை. சூழ இருந்தவர்களில் முக்கியமானவர்கள், திரு இரான் அவர்களிற்கு இடது மற்றும் வலது புறங்களில் இருந்த
இருவருந்தான். அவர்களின் பார்வை நிலத்தைத்தான் அதிகம் பார்த்தன. அதனாலோ என்னவோ கதை சொல்பவருக்கும்
கேட்பவர்களிற்கும் (அருகே இருந்த இருவர்) இடையிலே பெரிய இடைவெளி தோன்றிற்று. வில்லிசைக்கப்பட்ட கதையிற்கு
ஏற்ப அவர்களின் முகபாவங்களில் மாற்றங்கள் இல்லை (திரு இராஜனைத் தவிர). ஒரு கதை சொல்லும்போது அதைக்
கேட்டுக்கொண்டிருக்கும் சிறுபிள்ளை எப்படி வியப்படையுமோ, அதற்கு எப்படியான கேள்விகள் எழுமோ அதுபோன்று
இருந்திருந்தால் நிகழ்வு இன்னமும் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் வில்லிசைப் புலவரைத் தவிர மற்றவர்களில்
உற்சாகத்தைக் காணமுடியவில்லை. இது பார்வையாளர்களையும் சோர்வடையச் செய்யலாம்.
நகைச்சுவைத்தன்மை குறைவாக இருக்கிறது. இடையிடையே பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கலாம்.
அருகிலிருப்பவர்கள் சிறுபிள்ளைத்தனமாகக் கேள்வி கேட்பதுவும், கதைசொல்பவர் அதற்கு பதில்சொல்வதுவும் இருந்திருந்தால்
இன்னமும் தூள் கிளப்பியிருக்கும். உதாரணத்திற்கு "அன்பே சிவம்" திரைப்படத்தில் (என்ன சினிமாவிற்குப் போகிறேன் என்று
யோசிக்காதீர்கள். நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வதில் தவறில்லைத்தானே?) ஒரு தெருக்கூத்து வருகிறது. அதில்
இடம்பெற்ற அம்சங்கள் பெரியவர்களை மட்டுமல்ல இளைஞர்களையும் கவரக் கூடியவை. எனவே வில்லிசை தனியே
பெரியவர்களிற்கு மட்டுந்தானா? இளைஞர்களிற்கு இல்லையா?
அடுத்து, வில்லிசை நிகழ்விற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அதன் சுற்றுப்புறம்பற்றிச் சுருக்கமாய்ப் பார்ப்போம்.
என்ன இவன், வில்லிசை பற்றிச் சொல்லவந்துவிட்டு மேடை, சுற்றுப்புறம் என்று உளறுகிறான் என்று எண்ணாதீர்கள்.
மக்களிடம் கருத்தைத் தாங்கிச் செல்லும் ஒவ்வொரு கலைநிகழ்விற்கும் அதன் சுற்றுப்புறச் சூழல் எப்படி அமைந்திருக்கிறது
என்பது மிக அவசியம். சரி... மேடையைப் பொறுத்தவரை அது சரியாகத்தான் இருந்தது. ஆனாலும் மேடையின் பின்புறச்
சூழல்தான் கண்ணை சோர்ந்திடச் செய்தது. பின்புறச் சூழலின் நிறம் கறுப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் அமைக்கப்பட்டிருந்தது.
பொதுவாகவே கர்நாடக சங்கீதம், பரதாநாட்டியம் போன்ற கலைநிகழ்வுகளில் அதிகம் சாம்பல், கறுப்பு என்னும் சோர்வடையச்
செய்யும் நிறங்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பின்பறத்தில் வேறு எந்த உருவமைப்பகளோ இல்லை. ஒவ்வொரு
கதைக்கும் ஏற்றவாறு பின்புறத்தில் காட்சி அமைத்தால் நன்றாக இருக்கும். உதாரணத்திற்கு காசுமரம் வில்லிசை நிகழ்விற்கு
பின்புறத்தில் காசுமரத்தைப் போன்ற உருவம் அமைத்திருந்தால் வெகுவாகப் பார்வையாளர்களைக் கவர்ந்து, வில்லிசை நிகழ்வைத்
தொடர்ந்து பார்க்க ஆர்வத்தைத் தூண்டியிருக்கும். இன்றுதானே கணணி இருக்கிறது. இன்னமும் சிறப்பாகவே செய்யலாம்.
இனிவரும் காலங்களில் பின்புற நிறங்களையோ காட்சிகளையோ தேர்ந்தெடுப்பதிலும் கொஞ்சம் கவனம் செலுத்துதல் நன்று.
மக்களைச் சென்றடைவதற்கு தேவையான நுட்பங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், வில்லிசை நிகழ்வும் அதில் இடம்
பெற்ற கவித்துவமும், திரு இராஜன் அவர்களின் தனித்துவம்!!!
ஏதோ என் மனசில் பட்டது!
பயனெனில் கொள்க!
நன்றி
தமிழ்த் தொலைகஇகாட்சி இணையத்தில் ஞாயிறன்று 17:00 மணிக்கும், திங்களன்று 12:00 மணிக்கு மறு ஓளிபரப்பாகவும்
நிகழ்ந்த நாச்சிமார் கோவிலடி இராஜுன் வில்லிசைக் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி பற்றிய சீறு விமர்சினம் இது.
காசுமரம் என்னும் ஒரு சிறுகதையை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வில்லிசை நிகழ்வு அது. புலம்பெயர்ந்து வாழும்
ஈழத்தமிழ் சமூகத்தின் வாழ்க்கையையும், அதில் பணத்தின் ஆதிக்கமும் பற்றிய ஒரு அற்புதமான சிறுகதையை வில்லிசைக்கு
ஏற்றபடி தொகுத்தமைத்து, இனிமையான மெட்டோடு கவிமொழியில் மொழிந்து, தமிழ் சிந்திப்பதற்கு வழிசமைத்திருந்தார்கள்.
வில்லிசைபற்றி எனக்கொன்றும் பெரிதாகத் தெரியாதுதான். ஆனாலும் சாதாரண பார்வையாளன் என்னும் வகையில்
என்னைப் பாதித்தவற்றை எழுதுகிறேன். அந்நிகழ்வில் நடுநாயகமாக வீற்றிருந்தார் வில்லிசைப் புலவர் திரு இராஜன்
அவர்கள். அவரைச் சுற்றி மொத்தம் ஐந்து(?) கலைஞர்கள். அவர்களில் ஒருவர் திரு இராஜன் அவர்களின் மகன் என்று
எண்ணுகிறேன். ஒளிப்பதிவுக் கருவியும் அடிக்கடி அவரைச் சுற்றி வருவதாலோ என்னவோ அவ் வில்லிசை நிகழ்வில்
திரு இராஜன் அவர்களைத் தவிர மற்றவர் எவரும் எம்மைப் பாதிக்கவில்லை. அதுதவிர மற்றவர்கள் ஏதோ சோர்ந்துபோய்
இருந்தார்கள். சிலவேளைகளில் வில்லிசைக் கதைகேட்டு அந்த இடத்திலேயே நித்திரை கொண்டுவிடுவார்கள் போலவும்
இருந்தது. இடையிடையே அவர்களும் ஏதோ சொன்னார்கள்தான். ஆனாலும் அந்நிகழ்வுக்கு அவை வலுச்சேர்ப்பனவாக
இல்லை. சூழ இருந்தவர்களில் முக்கியமானவர்கள், திரு இரான் அவர்களிற்கு இடது மற்றும் வலது புறங்களில் இருந்த
இருவருந்தான். அவர்களின் பார்வை நிலத்தைத்தான் அதிகம் பார்த்தன. அதனாலோ என்னவோ கதை சொல்பவருக்கும்
கேட்பவர்களிற்கும் (அருகே இருந்த இருவர்) இடையிலே பெரிய இடைவெளி தோன்றிற்று. வில்லிசைக்கப்பட்ட கதையிற்கு
ஏற்ப அவர்களின் முகபாவங்களில் மாற்றங்கள் இல்லை (திரு இராஜனைத் தவிர). ஒரு கதை சொல்லும்போது அதைக்
கேட்டுக்கொண்டிருக்கும் சிறுபிள்ளை எப்படி வியப்படையுமோ, அதற்கு எப்படியான கேள்விகள் எழுமோ அதுபோன்று
இருந்திருந்தால் நிகழ்வு இன்னமும் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் வில்லிசைப் புலவரைத் தவிர மற்றவர்களில்
உற்சாகத்தைக் காணமுடியவில்லை. இது பார்வையாளர்களையும் சோர்வடையச் செய்யலாம்.
நகைச்சுவைத்தன்மை குறைவாக இருக்கிறது. இடையிடையே பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கலாம்.
அருகிலிருப்பவர்கள் சிறுபிள்ளைத்தனமாகக் கேள்வி கேட்பதுவும், கதைசொல்பவர் அதற்கு பதில்சொல்வதுவும் இருந்திருந்தால்
இன்னமும் தூள் கிளப்பியிருக்கும். உதாரணத்திற்கு "அன்பே சிவம்" திரைப்படத்தில் (என்ன சினிமாவிற்குப் போகிறேன் என்று
யோசிக்காதீர்கள். நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வதில் தவறில்லைத்தானே?) ஒரு தெருக்கூத்து வருகிறது. அதில்
இடம்பெற்ற அம்சங்கள் பெரியவர்களை மட்டுமல்ல இளைஞர்களையும் கவரக் கூடியவை. எனவே வில்லிசை தனியே
பெரியவர்களிற்கு மட்டுந்தானா? இளைஞர்களிற்கு இல்லையா?
அடுத்து, வில்லிசை நிகழ்விற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அதன் சுற்றுப்புறம்பற்றிச் சுருக்கமாய்ப் பார்ப்போம்.
என்ன இவன், வில்லிசை பற்றிச் சொல்லவந்துவிட்டு மேடை, சுற்றுப்புறம் என்று உளறுகிறான் என்று எண்ணாதீர்கள்.
மக்களிடம் கருத்தைத் தாங்கிச் செல்லும் ஒவ்வொரு கலைநிகழ்விற்கும் அதன் சுற்றுப்புறச் சூழல் எப்படி அமைந்திருக்கிறது
என்பது மிக அவசியம். சரி... மேடையைப் பொறுத்தவரை அது சரியாகத்தான் இருந்தது. ஆனாலும் மேடையின் பின்புறச்
சூழல்தான் கண்ணை சோர்ந்திடச் செய்தது. பின்புறச் சூழலின் நிறம் கறுப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் அமைக்கப்பட்டிருந்தது.
பொதுவாகவே கர்நாடக சங்கீதம், பரதாநாட்டியம் போன்ற கலைநிகழ்வுகளில் அதிகம் சாம்பல், கறுப்பு என்னும் சோர்வடையச்
செய்யும் நிறங்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பின்பறத்தில் வேறு எந்த உருவமைப்பகளோ இல்லை. ஒவ்வொரு
கதைக்கும் ஏற்றவாறு பின்புறத்தில் காட்சி அமைத்தால் நன்றாக இருக்கும். உதாரணத்திற்கு காசுமரம் வில்லிசை நிகழ்விற்கு
பின்புறத்தில் காசுமரத்தைப் போன்ற உருவம் அமைத்திருந்தால் வெகுவாகப் பார்வையாளர்களைக் கவர்ந்து, வில்லிசை நிகழ்வைத்
தொடர்ந்து பார்க்க ஆர்வத்தைத் தூண்டியிருக்கும். இன்றுதானே கணணி இருக்கிறது. இன்னமும் சிறப்பாகவே செய்யலாம்.
இனிவரும் காலங்களில் பின்புற நிறங்களையோ காட்சிகளையோ தேர்ந்தெடுப்பதிலும் கொஞ்சம் கவனம் செலுத்துதல் நன்று.
மக்களைச் சென்றடைவதற்கு தேவையான நுட்பங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், வில்லிசை நிகழ்வும் அதில் இடம்
பெற்ற கவித்துவமும், திரு இராஜன் அவர்களின் தனித்துவம்!!!
ஏதோ என் மனசில் பட்டது!
பயனெனில் கொள்க!
நன்றி

