07-28-2004, 10:00 PM
ஒரு வித்தியாசமான பொலோஅப் வந்திருக்கிது.. இது நம்ம புதினம் தளத்தான் இருந்தாலும் நெருப்பு தளத்தை சாடி வந்திருக்கிது படிச்சுப் பாருங்கோ..
ஹோம்வேக்கிலை கோட்டை விட்டிட்டு பிடிபட்டிட்டார்.. இந்த தேசிகள்.. பாயாசத்திலை இல்லை தேசிகன்.. தேத்தண்ணியிலை..
ஹோம்வேக்கிலை கோட்டை விட்டிட்டு பிடிபட்டிட்டார்.. இந்த தேசிகள்.. பாயாசத்திலை இல்லை தேசிகன்.. தேத்தண்ணியிலை..
கொழும்பிலிருந்து -தேசிகன்- புதினம் Wrote:நீல் தம்மிக இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவரே[size=24]???
கொட்டாவாவில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான நீல் தம்மிக என்பவர் இராணுவத்தையோ அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவையோ சார்ந்தவரல்ல என்று சிறீலங்காத் தரப்புத் தொடர்ந்து தெரிவித்து வந்தது.
மேற்படி நீல் தம்மிக மட்டக்களப்பிலுள்ள வெளிநாட்டு புனரமைப்பு நிறுவனமொன்றில் சாரதியாகக் கடமையாற்றியவர் என்றே இதுவரை வெளிவந்த தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் பொலநறுவை மாவட்டம் வெலிகந்தையைச் சேர்ந்த நீல் தம்மிக இராணுவத்தில் இருந்தாரென்றும், சுமார் 18 மாதங்களிற்கு முன்னர் இராணுவத்தை விட்டுத் தப்பியோடினார் என்றும் இப்போது கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தெரிவிக்கும் தகவலிலிருந்து முற்றாக மாறுபடும் இச் செய்தியின் பிரகாரம், சுமார் 18 மாதங்களாக நீல் தம்மிக இராணுவப் புலனாய்வுப் பிரிவில் செயற்பட்டு வருகிறார் என்ற கருத்துப்படவே ஊடகவியலாளர்களால் நோக்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, கருணாவின் பெயரைப் பாவித்து சந்திரிகாவிற்கு நெருக்கமான தமிழ் ஆயுதக் குழுவொன்றினால் நடாத்தப்படும் இணையத்தளமொன்று மேற்படி நபர்களிற்கு பாயாசத்தில் மயக்கமருந்து கொடுத்தே இக் கொலைகள் செய்யப்பட்டதாகவும், ஆறு புலிகள் வந்தே இக் கொலைகளைச் செய்ததாகவும் புரளியொன்றைக் கிளப்பி விட்டுள்ளது. கருணா கொழும்பிற்குத் தப்பியோடியதும் இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டதும், கொழும்பு ஆங்கில-சிங்கள ஊடகங்களினால் இது பிரபல்யப்படுத்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரதேசவாதத்தைப் பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் இத்தளம் கருணா சார்ந்தவர்களால் இலங்கையில் வைத்து நடாத்தப்படுவதான தோற்றத்தை மேற்படி தளத்தின் செய்திகள் ஏற்படுத்தினாலும் அது கனடாவில் இருந்து சந்திரிகா சார்பு தமிழ் ஆயுதக்குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கப்படுவதான செய்தியை கொழும்புப் பத்திரிகைகளின் பத்தியாளர்களும், செய்தியாளர்களும் அண்மையில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தனர்.
பிரதேசவாதத்தை ஏற்படுத்தவும், புலிகள் மீதான காழ்ப்புணர்வை கொட்டித் தீர்க்கவும் செயற்படும் இத்தளம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதுடன், சிங்களப் பத்திரிகையாளர்களிற்குத் தீனி போடும் ஒரு தளமாகவே செயற்பட்டு வருகிறது.
பொலிஸ் மாஅதிபரே புலிகளை இவ்விவகாரத்தில் காரணமின்றி குற்றஞ்சாட்டமுடியாது என்று தெரிவித்துள்ளதோடு, இவ்வீட்டிலிருந்த இருவரே இக்கொலைகளைச் செய்தார்கள் என்ற ரீதியில் விசாரனைகள் நடைபெற்று வரும் போதும் இத் தளங்கள் திட்டமிட்ட பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகின்றன.
இவ்வாறான தளங்கள் இலங்கையில் இயங்கவில்லையென்பதையும், இவை வெளிநாடுகளிலிருந்து சந்திரிகா சார்பு ஆயுதக்குழுவால் இயக்கப்படுகின்றன என்பதையும் தற்போது சிங்கள-ஆங்கில ஊடகங்கள் கிரகிக்கும் நிலையை அடைந்துள்ளன என்பதை ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியாளர் தெரிவித்துள்ள போதும், கருணாவால் தனது பெயரில் மேற்கொள்ளப்படும் இச் செயற்பாடுகளைக் கூட நிறுத்த முடியாத கையாலாக நிலையே கருணா இருப்பது கருணா பற்றிய பிரமையை ஆய்வாளர்களிடமிருந்து அடியோடு இல்லாது செய்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
Truth 'll prevail

