Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனிதனாவது எப்போது...? ? ?
#1
<b>மனிதனாவது எப்போது...? ? ?</b>

<b>அர்த்தங்களின் சந்தையில் முகவரியை
தொலைத்து, அந்நிய நாட்டில் அகதியாய்
தஞ்சமாய் வந்துறங்கியபோதே எனை
நோக்கிட்ட வினா எந்த நாட்டவர் என்று
நளினமாய் கேட்டிட, நானும்
சிறீலங்கன் என்று நயமாய் பகிர்ந்திட
அன்று ஆரம்பித்த பதிவுகள்தாம்
இன்றுவரை தொடர்கிறது தொடர்கதையாய்...

இருமணம் கலந்த திருமணப் பதிவில்
இனிய மழலைகளின் பெயர் பதிவில்
வேலை தேடும் படலங்களில்
அந்நியரோடு அந்நியமாய் அஞ்சாமல்
அன்போடு உறவாட நினைக்கும்போது
தொடர்கிறது நான் ஒரு சிறீலங்கனாய்....

இந்தநாட்டு பிரஜா உரிமைக்காக
அந்தநாட்டு பிரஜா உரிமையை
இழந்தபோதும் தொடர்கிறது
நான் ஒரு சிறீலங்கனாக..
போகும் இடம் தன்னிலும் வருமிடம் தன்னிலும்
தொடர்கிறது என்றென்றும் தொடர்கதையாய்...

நான் ஒர் அந்நியனாய் அகதியாய்
சிறீலங்கனாய் வேண்டாம்
புலத்தில் நிறபேதமில்லாத மனிதனாக
மதித்திடும் காலம் தான் எப்போ வரும்</b>
Reply


Messages In This Thread
மனிதனாவது எப்போது...? ? ? - by shanmuhi - 07-27-2004, 11:35 PM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:04 AM
[No subject] - by வெண்ணிலா - 07-28-2004, 05:59 AM
[No subject] - by Mathivathanan - 07-28-2004, 06:26 AM
[No subject] - by tamilini - 07-28-2004, 11:33 AM
[No subject] - by AJeevan - 07-28-2004, 12:57 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 12:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)