07-25-2004, 08:46 AM
[size=24]<b> நடமாடும் நினைவுகள்</b>
<b>உடலுக்கு
சமாதி கட்டுவதைப் போல
நினைவுகளுக்கும்
சமாதி கட்டினேன்
அதற்குள்ளேயே
அடங்குமென்று!
கட்டின பின்பும்
நடனமாடுகின்றன நினைவுகள்
சமாதிக்கு உள்ளும் வெளியுமாக!
கல்வெட்டுக்களைப் போல
காதல் வெட்டுக்களும் விழுந்ததால்
இந்தக் குருத்து வயதிலேயே
குமுறிக்கொண்டிருக்கிறது
ஒரு எரிமலை என் இதயத்துக்குள்ளே!!
அரும்புகள் வளர வளர...
தழும்புகள் தெளிவாவதைப் போல
அந்த நினைவுகளும் தெளிவாகிறது.
நான் மறக்க முயல முயல...!
காதல் குருடான என்னை
தனியாய்……….
திசை தெரியாத காட்டிலே
விட்டு விட்டு……..
வேறொருத்தியோடு
புதுஉறவுக்கு பாலமமைத்துக்
கொண்டிருக்கிறான்
திரும்பிவரமாட்டேனென்ற
நம்பிக்கையில்.
என்றோ ஒரு நாள்
நான் சந்திக்காவிட்டாலும்
என்னுடைய கவிதைகளாவது
உன்னை சந்திக்கும்
என் நினைவுகள் உறங்காது
அதுவரைக்கும்!
இது சத்தியம்! இது சத்தியம்!</b>
<b>(யாவும் கற்பனை)</b>
<b>உடலுக்கு
சமாதி கட்டுவதைப் போல
நினைவுகளுக்கும்
சமாதி கட்டினேன்
அதற்குள்ளேயே
அடங்குமென்று!
கட்டின பின்பும்
நடனமாடுகின்றன நினைவுகள்
சமாதிக்கு உள்ளும் வெளியுமாக!
கல்வெட்டுக்களைப் போல
காதல் வெட்டுக்களும் விழுந்ததால்
இந்தக் குருத்து வயதிலேயே
குமுறிக்கொண்டிருக்கிறது
ஒரு எரிமலை என் இதயத்துக்குள்ளே!!
அரும்புகள் வளர வளர...
தழும்புகள் தெளிவாவதைப் போல
அந்த நினைவுகளும் தெளிவாகிறது.
நான் மறக்க முயல முயல...!
காதல் குருடான என்னை
தனியாய்……….
திசை தெரியாத காட்டிலே
விட்டு விட்டு……..
வேறொருத்தியோடு
புதுஉறவுக்கு பாலமமைத்துக்
கொண்டிருக்கிறான்
திரும்பிவரமாட்டேனென்ற
நம்பிக்கையில்.
என்றோ ஒரு நாள்
நான் சந்திக்காவிட்டாலும்
என்னுடைய கவிதைகளாவது
உன்னை சந்திக்கும்
என் நினைவுகள் உறங்காது
அதுவரைக்கும்!
இது சத்தியம்! இது சத்தியம்!</b>
<b>(யாவும் கற்பனை)</b>
----------

