07-23-2004, 04:28 PM
<b>புதிய அரசியற் பயணத்திற்கு தயாராகின்றார் சந்திரிகா! </b>
தனது தற்போதைய பதவிக்காலம் முடிவடைந்த பிற்பாடு தேர்தலில் தனது அரசியல் எதிர்காலம் முற்றுப்புள்ளி பெற்றுவிடும் என்ற நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளிலே சந்திரிகா தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
ஒருவர் இரண்டு முறையே ஐனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்ற வகையில் 2005ம் ஆண்டுடன் முடிவடையும் தனது பதவிக்காலத்தின் பின் சந்திரிகாவால் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை தோன்றியுள்ளது.
இந்த நிலையில், கிழக்கில் பதட்ட நிலையைத் தோற்றுவித்து புலிகளை மீண்டும் யுத்தத்திற்கு இழுத்து அவசர காலச் சட்டத்தை பிரகடனப்படுத்துவன் மூலம் தனது பதவியை சிறிது காலம் நீடிக்கலாம் என எதிர்ப்பார்த்திருந்த சந்;திரிகா, அது சாத்தியப்படாதையிட்டு மற்றுமொரு முனையில் களத்தில் இறங்கியுள்ளார்.
இதன் பிரகாரம் விடுதலைப்புலிகள் பற்றிய பயப்பிராந்தியத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்தி அதன் மூலம் பெரும்பாண்மைப் பலத்தைப் பெறமுனையும் சந்திரிகா அவ்வாறு பெரும்பாண்மையைப் பெற்று சனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து சகல அதிகாரமும் கொண்ட பாராளுமன்ற அரசை மீண்டும் ஆட்சிக்கு கொணர வழிவகுத்து அதில் தான் பிரதமராக இருக்க விருப்பம் தெரிவித்து அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக இதற்கான முன்னெடுப்புக்களை சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர் மேற்கொண்டு வரும் அதேவேளை, இது பற்றி சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர கருத்துப் பகிர்வை மேற்கொள்வதற்கு அவர் தனது இராஜதந்திரப் பணியாளர்களிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தவகையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதியாக இருந்த சார்ளி மகேந்திரனின் இடத்திற்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறீலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் இதற்கான முக்கிய பணிகளை ஆற்றத் தற்போது பணிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரையும் இப்பணியை ஆற்றும்படி பணித்துள்ள சந்திரிகா, டிசம்பர் மாதத்திலிருந்து அவரை கனடாவிற்கான பிரதம தூதுவராக நியமிப்பதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். தமிழ் பெண்ணொருவரை மணந்த சிறீலங்காவின் சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் இப் பணிக்குச் சிறந்தவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, தென்னிலங்கை வாக்குவாங்கியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் விடுதலைப்புலிகளிற்கெதிரான கருத்துப் பரப்புரையை மேற்கொள்ளும் செயற்பாடும் தீவிரப்படுத்தப்படவுள்ளது. அத்தோடு தமிழர்கள் புலம்பெயர்ந்து அதிகமாக வாழும் நாடுகளான கனடா, சுவிஸ் போன்ற இடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களையும், அரச ஆதரவு ஆயுதக்குழுக்களுக்கு நெருங்கியவர்களையும் நியமிக்கும் பணியில் சந்திரிகா ஈடுபட்டுள்ளார்.
இந்தவகையில் ஏற்கனவே கனடாவில் ஒரு நகருக்கு கொன்சலேற்காகப் செயற்பட்டு வரும் தமிழரைக் தொடர்ந்து இரு வருடங்களிற்கு பேணவும், சுவிஸில் உள்ள ஒரு நகரத்தில் பணிபுரியும் அரச ஆதரவுக்குழுவிற்கு நெருக்கமானவரைத் தக்க வைக்கவும் பரிந்துரைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
இவ்வாறான செயற்பாடுகளினூடக பதட்டத்தைத் தோற்றுவித்து தனது பதவியைத் தக்கவைக்க அல்லது அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொண்டு தான் பிரதமராக வருவதற்கான நடவடிக்கைகளிற்கு சந்திரிகா கங்கணம் கட்டிச் செயற்படுவதாக உறுதியாகத் தெரியவந்துள்ளது.
puthinam.com
தனது தற்போதைய பதவிக்காலம் முடிவடைந்த பிற்பாடு தேர்தலில் தனது அரசியல் எதிர்காலம் முற்றுப்புள்ளி பெற்றுவிடும் என்ற நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளிலே சந்திரிகா தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
ஒருவர் இரண்டு முறையே ஐனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்ற வகையில் 2005ம் ஆண்டுடன் முடிவடையும் தனது பதவிக்காலத்தின் பின் சந்திரிகாவால் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை தோன்றியுள்ளது.
இந்த நிலையில், கிழக்கில் பதட்ட நிலையைத் தோற்றுவித்து புலிகளை மீண்டும் யுத்தத்திற்கு இழுத்து அவசர காலச் சட்டத்தை பிரகடனப்படுத்துவன் மூலம் தனது பதவியை சிறிது காலம் நீடிக்கலாம் என எதிர்ப்பார்த்திருந்த சந்;திரிகா, அது சாத்தியப்படாதையிட்டு மற்றுமொரு முனையில் களத்தில் இறங்கியுள்ளார்.
இதன் பிரகாரம் விடுதலைப்புலிகள் பற்றிய பயப்பிராந்தியத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்தி அதன் மூலம் பெரும்பாண்மைப் பலத்தைப் பெறமுனையும் சந்திரிகா அவ்வாறு பெரும்பாண்மையைப் பெற்று சனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து சகல அதிகாரமும் கொண்ட பாராளுமன்ற அரசை மீண்டும் ஆட்சிக்கு கொணர வழிவகுத்து அதில் தான் பிரதமராக இருக்க விருப்பம் தெரிவித்து அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக இதற்கான முன்னெடுப்புக்களை சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர் மேற்கொண்டு வரும் அதேவேளை, இது பற்றி சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர கருத்துப் பகிர்வை மேற்கொள்வதற்கு அவர் தனது இராஜதந்திரப் பணியாளர்களிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தவகையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதியாக இருந்த சார்ளி மகேந்திரனின் இடத்திற்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறீலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் இதற்கான முக்கிய பணிகளை ஆற்றத் தற்போது பணிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரையும் இப்பணியை ஆற்றும்படி பணித்துள்ள சந்திரிகா, டிசம்பர் மாதத்திலிருந்து அவரை கனடாவிற்கான பிரதம தூதுவராக நியமிப்பதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். தமிழ் பெண்ணொருவரை மணந்த சிறீலங்காவின் சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் இப் பணிக்குச் சிறந்தவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, தென்னிலங்கை வாக்குவாங்கியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் விடுதலைப்புலிகளிற்கெதிரான கருத்துப் பரப்புரையை மேற்கொள்ளும் செயற்பாடும் தீவிரப்படுத்தப்படவுள்ளது. அத்தோடு தமிழர்கள் புலம்பெயர்ந்து அதிகமாக வாழும் நாடுகளான கனடா, சுவிஸ் போன்ற இடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களையும், அரச ஆதரவு ஆயுதக்குழுக்களுக்கு நெருங்கியவர்களையும் நியமிக்கும் பணியில் சந்திரிகா ஈடுபட்டுள்ளார்.
இந்தவகையில் ஏற்கனவே கனடாவில் ஒரு நகருக்கு கொன்சலேற்காகப் செயற்பட்டு வரும் தமிழரைக் தொடர்ந்து இரு வருடங்களிற்கு பேணவும், சுவிஸில் உள்ள ஒரு நகரத்தில் பணிபுரியும் அரச ஆதரவுக்குழுவிற்கு நெருக்கமானவரைத் தக்க வைக்கவும் பரிந்துரைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
இவ்வாறான செயற்பாடுகளினூடக பதட்டத்தைத் தோற்றுவித்து தனது பதவியைத் தக்கவைக்க அல்லது அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொண்டு தான் பிரதமராக வருவதற்கான நடவடிக்கைகளிற்கு சந்திரிகா கங்கணம் கட்டிச் செயற்படுவதாக உறுதியாகத் தெரியவந்துள்ளது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

