Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உனக்காய் காத்திருப்பேன்....
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/rose.jpg' border='0' alt='user posted image'>

மலரே...
வசந்தத்தின் வரவே
காலம் மாற நீயும் மாறினையோ
நொடியோடு வந்த வாசம் போல்
உன் வசந்தமும் மறைய
பூங்குருவி தன் வசந்தமும்
வாடி வீழுமோ.....???!
வீழட்டும் உன் வதனம்
வேசங்கள் மீது நேசங்கள் எதற்கு
நிலையில்லா உலகில்
நிலையானது என்ன
தேடினேன்
கண்டேன் உண்மை
வீழ்வது நின் உருவாகினும்
வாழ்வது நம் நேசமாகும்...!

மனதோடு மட்டும் நேசம் வாழுமா
அங்கும் ஆசைகள் கூடவே
நேசங்கள் ஓரங்கட்டுது
இருந்தும்....
மாற்றாரிடம் கடன் கொடுக்க
என் நேசம் ஒன்றும் பண்டம் அல்ல
பரிமாறிப் பாழ்படுத்த
நான் ஒன்றும் பரோபகாரியும் அல்ல
என் நேசம் என்னோடு
உன் நேசம் உன்னோடு
அங்கு நான் சுயநலவாதிதான்
நேசமிரண்டும் நிலையாய் நேசித்தால்
மீண்டும் சந்திப்போம்
அடுத்த வசந்தத்தில்....!
அதுவரை நீ
என் நினைவறையில்
நீக்கமற இருப்பாய்....!
நானோ மாந்தோப்பில்
அதே தனிமையில்
உனக்காய் காத்திருப்பேன்
விழி மூடாது....!


நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
உனக்காய் காத்திருப்ப - by kuruvikal - 07-22-2004, 02:51 AM
[No subject] - by kuruvikal - 07-22-2004, 03:01 AM
[No subject] - by kavithan - 07-22-2004, 02:41 PM
[No subject] - by shanmuhi - 07-22-2004, 03:30 PM
[No subject] - by kuruvikal - 07-22-2004, 04:02 PM
[No subject] - by tamilini - 07-22-2004, 04:07 PM
[No subject] - by kuruvikal - 07-22-2004, 04:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)