07-19-2004, 06:32 PM
[size=18]<b>காத்திருக்கிறேன்</b>
<b>வாழ்வின் தேடுதலுக்காக
நகர்ந்த நாட்களில்
என்னை நீதான்
அடையாளப்படுத்தினாய்</b>
<b>உன் மௌனத்தின்
வேர்களில் பூத்திருக்கிறது
என் காதல் பூ</b>
<b>பனித்துளியை பேட்டி
காணும் மேகங்கள்
விண்மீனைப் பிடிக்கும்
மூங்கில்களில் அவசரம்..</b>
<b>இப்படியான என்
கனவுகளின் தொடர்ச்சியில்
அலைகள் மறந்த
கடலுக்குள் நாம்...
என நீட்சித்தது</b>
<b>என்னைத் தோற்கடிப்பதாய்
உனக்குள்ளே சந்தோஷப்படும்
தருணங்களில் தானடி
நினைக்கிறேன் தோற்காத
நம்முடைய காதலை...........!</b>
<b>மீன்களின் லயிப்பில்
ரசிக்கும் நாணல்
நதிக்குள் ஏற்படும்
சலனத்தை மறப்பதுவாய்
என் ஞாபக நதிக்கரையில்
கூட உன் வெட்கமே சலனமாய்..</b>
<b>அன்றைய மழை
இன்றுவரை விடாமல்........
காத்திருக்கிறேன்
குடை தருவாயென!</b>
<b>வாழ்வின் தேடுதலுக்காக
நகர்ந்த நாட்களில்
என்னை நீதான்
அடையாளப்படுத்தினாய்</b>
<b>உன் மௌனத்தின்
வேர்களில் பூத்திருக்கிறது
என் காதல் பூ</b>
<b>பனித்துளியை பேட்டி
காணும் மேகங்கள்
விண்மீனைப் பிடிக்கும்
மூங்கில்களில் அவசரம்..</b>
<b>இப்படியான என்
கனவுகளின் தொடர்ச்சியில்
அலைகள் மறந்த
கடலுக்குள் நாம்...
என நீட்சித்தது</b>
<b>என்னைத் தோற்கடிப்பதாய்
உனக்குள்ளே சந்தோஷப்படும்
தருணங்களில் தானடி
நினைக்கிறேன் தோற்காத
நம்முடைய காதலை...........!</b>
<b>மீன்களின் லயிப்பில்
ரசிக்கும் நாணல்
நதிக்குள் ஏற்படும்
சலனத்தை மறப்பதுவாய்
என் ஞாபக நதிக்கரையில்
கூட உன் வெட்கமே சலனமாய்..</b>
<b>அன்றைய மழை
இன்றுவரை விடாமல்........
காத்திருக்கிறேன்
குடை தருவாயென!</b>
----------

